தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
கன்னட திரையுலகில் நடிகர் ராஜ்குமாருக்கு அடுத்ததாக மரியாதைக்குரிய நபராக ரசிகர்களால் மட்டுமல்ல, திரையுலகை சேர்ந்தவர்களாலும் போற்றப்படுபவர் நடிகர் விஷ்ணுவர்தன். தனது 37 வருட சினிமா வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்த விஷ்ணுவர்தன் கடந்த 2009 ஆம் வருடம் காலமானார். அவர் நினைவாக பெங்களூருவில் உள்ள அபிமன் ஸ்டுடியோவில் அவருக்கு ஒரு நினைவிடம் கட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது வேறுசில கட்டடங்களின் கட்டுமான காரணங்களுக்காக ஒரே இரவில் அந்த நினைவிடம் இடிக்கப்பட்டுள்ளது.
இது விஷ்ணுவர்தன் ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகினரிடமும் கூட அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நடிகர் கிச்சா சுதீப் கூறும்போது, “விஷ்ணுவர்தனின் நினைவிடம் இடிக்கப்பட்டது இதயத்தை நொறுக்குவதாக இருக்கிறது. நான் கிச்சாவாக பேசவில்லை. அவரது ஒரு ரசிகனாக மிகப்பெரிய அளவில் புண்பட்டு இருக்கிறேன். அதேசமயம் விஷ்ணுவர்தன் எப்போதுமே சொல்வதுண்டு, “இறந்தாலும் நான் ஏதோ ஒரு கட்டடத்துக்குள் அடைந்து கிடக்க விரும்ப மாட்டேன். இல்லையென்றால் ஒரு அசையாத பொருளாக இருக்க மாட்டேன். வேறு ஐந்து விதமான வடிவங்களாக நான் உணரப்படுவேன். நாம் இயற்கையை சேர்ந்தவர்கள் என்று அவ்வப்போது கூறுவார்.
ஒரு வகையில் அவரது அந்த விருப்பம் இப்போது நிறைவேற்றப்பட்டிருந்தாலும் கூட சாதாரண ரசிகர்களும் மக்களும் இதை புரிந்து கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் ஒரு கடிதம் அனுப்புவதற்கு தபால் பெட்டி எப்படி தேவையோ அதே போலத்தான் நம் பிரார்த்தனைகளை மரியாதையை செலுத்துவதற்கு ஒரு நினைவிடம் தேவை” என்று கூறியுள்ளார்.
நடிகர் ரிஷப் ஷெட்டியும், “விஷ்ணுவர்தன் நினைவிடம் இடிக்கப்பட்டது கண்டனத்திற்குரியது. அவரது பெர்சனாலிட்டியையும் கலைக்கு அவர் செய்த பணிகளையும் அவமானப்படுத்துவது போல இருக்கிறது” என்று கூறியுள்ளார்.