நடிகர் ஜெய்சங்கர் பெயரிலான சாலை திறப்பு | பாரம்பரியமிக்க ஏவிஎம் தியேட்டர் இடிப்பு | சினிமா கைவிட்டால் படிப்பை வைத்து பிழைத்துக் கொள்வேன்: சிவகார்த்திகேயன் | சினிமா நடிகைகளுக்கு சவாலாக களமிறங்கும் ஏஐ அழகிகள் : ஏஐ.,யில் உருவான இசை ஆல்பம் வைரல் | ஏஐ தொழில்நுட்பத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சன்னி லியோன் | எனது அந்த இரண்டு படங்களை ஜனாதிபதி குறிப்பிட்டது ஏன் : மோகன்லால் விளக்கம் | 60 புதுமுக நடிகர்களுடன் பிரித்விராஜ் நடிக்கும் சந்தோஷ் டிராபி | கூலியில் ஏற்பட்ட மனக்குறை : ரெபோ மோனிகா ஜான் ஆதங்கம் | 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரிஜினல் கிளைமாக்ஸ் உடன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ஷோலே | 'இட்லி கடை' படத்தின் நீளம் குறித்து தகவல் இதோ! |
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் 'தி கோட்'. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது. ஆனாலும், வெங்கட் பிரபுவின் அடுத்த படம் இழுபறியில் இருந்தது. சிவகார்த்திகேயனை வைத்து இவர் ஒரு படம் இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்னையால் அந்த படம் தள்ளிபோய்க் கொண்டே இருந்தது. தற்போது நவம்பர் மாதத்தில் கால்ஷீட்டை சிவகார்த்திகேயன் ஒதுக்கி உள்ளாராம். இதனால் படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை வெங்கட் பிரபு இலங்கையில் மேற்கொண்டு வந்தார்.
இந்த படமும் டைம் டிராவல் சம்மந்தப்பட்ட சயின்ஸ் பிக்ஷன் கதையில் தான் உருவாகிறது. படத்தில் இரு நாயகிகள் உள்ளனர். கல்யாணி பிரியதர்ஷன், கயாடு லோகர் ஆகியோர் நடிக்க போகிறார்கள். இவர்களில் கல்யாணி ஏற்கனவே வெங்கட்பிரபுவின் மாநாடு மற்றும் சிவகார்த்திகேயன் உடன் ஹீரோ படங்களில் நடித்தவர்.
கயாடு முதன்முறையாக வெங்கட்பிரபு, சிவகார்த்திகேயன் உடன் பணியாற்ற உள்ளார். டிராகன் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான கயாடு லோகருக்கு தொடர்ச்சியாக பல பட வாய்ப்புகள் வருகின்றன. தற்போது இதயம் முரளி, சிம்புவின் 49வது படம் ஆகிய படங்களை இவர் கைவசம் வைத்துள்ளார்.