ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் 'தி கோட்'. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது. ஆனாலும், வெங்கட் பிரபுவின் அடுத்த படம் இழுபறியில் இருந்தது. சிவகார்த்திகேயனை வைத்து இவர் ஒரு படம் இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்னையால் அந்த படம் தள்ளிபோய்க் கொண்டே இருந்தது. தற்போது நவம்பர் மாதத்தில் கால்ஷீட்டை சிவகார்த்திகேயன் ஒதுக்கி உள்ளாராம். இதனால் படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை வெங்கட் பிரபு இலங்கையில் மேற்கொண்டு வந்தார்.
இந்த படமும் டைம் டிராவல் சம்மந்தப்பட்ட சயின்ஸ் பிக்ஷன் கதையில் தான் உருவாகிறது. படத்தில் இரு நாயகிகள் உள்ளனர். கல்யாணி பிரியதர்ஷன், கயாடு லோகர் ஆகியோர் நடிக்க போகிறார்கள். இவர்களில் கல்யாணி ஏற்கனவே வெங்கட்பிரபுவின் மாநாடு மற்றும் சிவகார்த்திகேயன் உடன் ஹீரோ படங்களில் நடித்தவர்.
கயாடு முதன்முறையாக வெங்கட்பிரபு, சிவகார்த்திகேயன் உடன் பணியாற்ற உள்ளார். டிராகன் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான கயாடு லோகருக்கு தொடர்ச்சியாக பல பட வாய்ப்புகள் வருகின்றன. தற்போது இதயம் முரளி, சிம்புவின் 49வது படம் ஆகிய படங்களை இவர் கைவசம் வைத்துள்ளார்.




