தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை | சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படப்பிடிப்பு நாளை துவக்கம் | பிளாஷ்பேக்: ஊதியத்தை உயர்த்திக் கேட்டு, உற்சாகமிகு நகைச்சுவையை வழங்கிய டி ஆர் ராமச்சந்திரனின் “சபாபதி” | அட்லி - பிரியா தம்பதியின் மகளுக்கு 'மியூ' பெயர் சூட்டல் | 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தை மிஸ் செய்தது ஏன்? ஜெய் விளக்கம் | அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்? | அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஏன் அந்த இலாகா? நடிகர் விஷால் கேள்வி | பஹத் பாசில் - பிரேம்குமார் இணையும் புதிய படம் துவக்கம் | விஜய்க்கு அவகாசம் தரணும்... ரஜினியுடன் போட்டிதான், பொறாமை இல்லை: கமல் பேட்டி | கருப்பு : இரண்டே நாளில் 50 கோடி வசூல் ? |

மலையாள திரையுலகில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வரும் ஆக., 14ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் நடிகையும் தயாரிப்பாளருமான சான்ட்ரா தாமஸ் என்பவர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இப்படி ஒரு பெண் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது இதுதான் முதல் முறை. ஆனால் அவரது வேட்பு மனுவை தேர்தல் நிர்வாக குழு நிராகரித்தது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சான்ட்ரா தாமஸ். அவர் தனியாக இரண்டு படங்களை தயாரித்திருந்தாலும் ஏற்கனவே நடிகர் விஜய்பாபு என்பவருடன் இணைந்து ஏழு படங்களை இணை தயாரிப்பாளராக தயாரித்துள்ளார். ஆனால் அதை கணக்கில் கொள்ளாமல் அவர் வெறும் இரண்டு படங்கள் மட்டும்தான் தயாரித்திருக்கிறார். ஆனால் தேர்தலில் போட்டியிட மூன்று படங்களை தயாரித்திருக்க வேண்டும் என்பதை காரணம் காட்டி அவரது மனு நிகராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவருடன் இணைந்து படங்களை தயாரித்த தயாரிப்பாளர் விஜய்பாபு தனது முகநூல் பக்கத்தில் இது குறித்து கூறும்போது, “சான்ட்ரா தாமஸ் என்னுடைய நிறுவனத்தில் இருந்து அவருக்கு சேர வேண்டியதை எல்லாம் பெற்றுக் கொண்டு 2016லேயே விலகி விட்டார். அதனால் என்னுடன் இணைந்து தயாரித்த படங்களை அவர் கணக்கில் சேர்க்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.
அதேசமயம் திரையுலகை சேர்ந்த சிலர், அவர் எத்தனை படங்களை தயாரித்துள்ளார் என்பது தான் கேள்வியே தவிர, யாருடன் இணைந்து தயாரித்தார், எந்த வருட காலகட்டத்தில் தயாரித்தார், இப்போது அவருடன் சேர்ந்து இருக்கிறாரா, விலகி விட்டாரா என்பதெல்லாம் ஒரு கேள்வியே அல்ல.. அவர் கணக்குப்படி மொத்தம் 9 படங்களில் அவர் தயாரிப்பாளர் தான். அந்த வாதம் தான் நீதிமன்றத்திலும் செல்லும் என்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே இடையில் இருக்கும் நிலையில் சான்ட்ரா தாமஸ் தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பது குறித்து பரபரப்பு நீடித்து வருகிறது.