என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
மலையாளத்தில் வளர்ந்து வந்த இளம் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஜய்பாபு. இவர் மீது புதுமுக நடிகை ஒருவர் தனக்கு சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து எர்ணாகுளம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விஜய் பாபுவை கைது செய்ய தேடிவந்த நிலையில் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.
இந்த நிலையில் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது, அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம். அவர் முதலில் இந்தியா திரும்பட்டும் அதன்பிறகு முன்ஜாமீன் பற்றி யோசிக்கலாம் என கூறிவிட்டது. இந்த நிலையில் தான் விரைவில் இந்தியா திரும்புவதாககூறி தனது ரிட்டர்ன் டிக்கெட்டையும் தனது வழக்கறிஞர் மூலம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார் விஜய்பாபு.
இதற்கிடையில் விஜய்பாபு தற்போது நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், புகார் அளித்த நடிகையுடன் தனக்கு நட்பு இருந்ததாகவும், அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. அவர் சம்மதத்துடன்தான் எல்லாம் நடந்தது என்றும். அந்த மனுவில் தெரிவித்துள்ளார் இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.