ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
மலையாளத்தில் வளர்ந்து வந்த இளம் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஜய்பாபு. இவர் மீது புதுமுக நடிகை ஒருவர் தனக்கு சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து எர்ணாகுளம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விஜய் பாபுவை கைது செய்ய தேடிவந்த நிலையில் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.
இந்த நிலையில் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது, அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம். அவர் முதலில் இந்தியா திரும்பட்டும் அதன்பிறகு முன்ஜாமீன் பற்றி யோசிக்கலாம் என கூறிவிட்டது. இந்த நிலையில் தான் விரைவில் இந்தியா திரும்புவதாககூறி தனது ரிட்டர்ன் டிக்கெட்டையும் தனது வழக்கறிஞர் மூலம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார் விஜய்பாபு.
இதற்கிடையில் விஜய்பாபு தற்போது நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், புகார் அளித்த நடிகையுடன் தனக்கு நட்பு இருந்ததாகவும், அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. அவர் சம்மதத்துடன்தான் எல்லாம் நடந்தது என்றும். அந்த மனுவில் தெரிவித்துள்ளார் இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.