ஆஸ்கர் விருது - நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் |

மலையாளத்தில் பிரபல நடிகரான பிரித்விராஜின் சகோதரர் இந்திரஜித் சுகுமாரன். அவரும் ஒரு நடிகர்தான். சமீபத்தில் அவரது நடிப்பில் தீரம் என்கிற படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஜித்தின் டி சுரேஷ் என்பவர் இயக்கியுள்ளார். திவ்யா பிள்ளை கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் கையாளப்பட்டுள்ள விமர்சன ரீதியான கருத்து காரணமாகவே இந்த படம் வளைகுடா நாடுகளில் கூட வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படம் ஓடும் திரையரங்கு ஒன்றுக்கு இயக்குனர் மற்றும் கதாநாயகி திவ்யா பிள்ளை உள்ளிட்டோர் வந்து, படம் முடியும்போது ரசிகர்களை சந்தித்து படம் எப்படி இருக்கிறது என்று கேட்டனர்.
அதில் ஒரு ரசிகர் நேருக்கு நேராக இந்த படம் ரொம்பவே மோசம்.. எங்களது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இந்த படம் பார்க்க வந்திருக்கிறோம். ஆனால் இந்த படத்தில் இப்படி விஷயத்தை சொன்ன முறை தவறு. இது ஒரு மோசமான படம் என்று கூறியதும், அங்கே இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த நாயகி திவ்யா பிள்ளை இரு தரப்பினரையும் சமாதானம் செய்து, “படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அவரது கருத்துக்களை சொல்ல உரிமை உண்டு. அதை நாம் தடுக்கக்கூடாது. எல்லோருமே படம் பற்றி பாசிடிவாக சொல்வார்கள் என்றும் நாம் எதிர்பார்க்கக் கூடாது” என்று கூறி அங்கே எழுந்த சலசலப்பை அமைதிப்படுத்தினார்.




