துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தெலுங்கு திரையுலகில் பிரபல சீனியர் நடிகரான மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு, தற்போது கண்ணப்பா என்கிற புராண படத்தை தயாரித்து அதில் கதாநாயகனாக நடித்து வருகிறார். முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். படம் ஜூன் 27ம் தேதி வெளியாக இருக்கிறது. பான் இந்திய படமாக இது உருவாகியுள்ளது. அதற்கேற்றபடி மலையாளத்தில் இருந்து மோகன்லால், பாலிவுட்டில் இருந்து அக்ஷய் குமார் மற்றும் தெலுங்கில் இருந்து நடிகர் பிரபாஸ் ஆகியோர் மூன்று முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களது கதாபாத்திரம் கேமியோ என்று சொல்லும் அளவிற்கு சில நிமிடங்களே வந்து போகும் விதமாகத்தான் உருவாக்கப்பட்டிருந்தது என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் நடிகர் விஷ்ணு மஞ்சு இந்த மூவரும் படத்தில் எவ்வளவு நேரம் இடம் பெறுகிறார்கள் என்கிற விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த வகையில் இந்த படத்தில் ருத்ரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பிரபாஸ் 15லிருந்து 20 நிமிடங்கள் வரை திரையில் தோன்றுகிறாராம். குறிப்பாக கடைசி ஐம்பது நிமிட காட்சிகளில் இவரது கதாபாத்திரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமாம். அதேபோல கிராதா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள மோகன்லால் படத்தில் 15 நிமிட காட்சிகளில் வருகிறார் என்றும், சிவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அக்ஷய் குமார் பத்து நிமிடங்கள் வந்து போகிறார் என்றும் கூறியுள்ளார் நடிகர் விஷ்ணு மஞ்சு.