பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி | வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் | கருப்பு : பிரமோஷனை ஆரம்பித்த த்ரிஷா | இரண்டு வாரங்களில் 'ஜனநாயகன்' ரிலீஸ் : தயாரிப்பாளர் சொன்ன தகவல் | 'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? |

‛பார்க்கிங், லப்பர் பந்து' படங்களை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் 'டீசல்'. இதனை சண்முகம் முத்துசாமி இயக்கி உள்ளார். அதுல்யா ரவி நாயகியாக நடித்துள்ளார், விநய் வில்லனாக நடித்துள்ளார். திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து ஹரிஷ் கல்யாண் கூறியதாவது: 2014ம் ஆண்டுக்கு முன்பு நடந்த டீசல் மாபியாக்களின் கதை. அதன் நீட்சி இப்போதும் இருப்பதால் கதை இந்த காலகட்டத்திற்கும் பொருந்தும். கப்பலில் இருந்து சுத்திகரிப்பு ஆலைக்கு குழாய் மூலம் எடுத்துக் செல்லும் குரூடாயிலை சுற்றி நடந்த மாபியாக்களின் அக்கிரமங்களும், அரசியல் தலையீடும்தான் கதை. இந்த மாபியாக்களை எதிர்த்து ஒரு மீனவ இளைஞன் போராடுவது திரைக்கதை.
இந்த படத்திற்காக நடுக்கடலில் படகு ஓட்டவும், மீன்பிடிக்கவும் கற்றுக் கொண்டேன். நான் நடிக்கும் முதல் ஆக்ஷன் படம் என்பதால் பல காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்தேன். ஒரு காலத்தில் தீபாவளி படங்களை ஆர்வத்துடன் பார்த்தேன். ஆனால் இன்றைக்கு என் படமே தீபாவளி ரிலீசாக வெளிவருகிறது. 'பார்க்கிங்', 'லப்பர் பந்து' வரிசையில் 'டீசல்' படமும் ஹாட்ரிக் வெற்றிபெறும். இவ்வாறு அவர் கூறினார்.