தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை | சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படப்பிடிப்பு நாளை துவக்கம் | பிளாஷ்பேக்: ஊதியத்தை உயர்த்திக் கேட்டு, உற்சாகமிகு நகைச்சுவையை வழங்கிய டி ஆர் ராமச்சந்திரனின் “சபாபதி” | அட்லி - பிரியா தம்பதியின் மகளுக்கு 'மியூ' பெயர் சூட்டல் | 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தை மிஸ் செய்தது ஏன்? ஜெய் விளக்கம் | அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்? | அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஏன் அந்த இலாகா? நடிகர் விஷால் கேள்வி | பஹத் பாசில் - பிரேம்குமார் இணையும் புதிய படம் துவக்கம் | விஜய்க்கு அவகாசம் தரணும்... ரஜினியுடன் போட்டிதான், பொறாமை இல்லை: கமல் பேட்டி | கருப்பு : இரண்டே நாளில் 50 கோடி வசூல் ? |

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் 'டீசல்.' மணிவண்ணனின் உதவியாளர் சண்முகம் முத்துசாமி இயக்குகிறார். அதுல்யா ரவி, ஹரிஷ் ஜோடியாக நடிக்கிறார்.
இவர்கள் தவிர வினய் ராய், அனன்யா, கருணாஸ், ரமேஷ் திலக், விவேக் பிரசன்னா, சச்சின் கெடேகர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். திபு நினன் தாமஸ் இசை அமைக்கிறார், எம்.எஸ்.பிரபு, ரிச்சர்ட் என்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்கள். வருகிற 17ம் தேதி படம் வெளிவருகிறது.
படம் குறித்து இயக்குனர் சண்முகம் முத்துசாமி கூறியிருப்பதாவது: 'டீசல்' மக்களுக்கான படம். நாம் பெட்ரோல், டீசலைக் கடக்காத நாளில்லை. 1970க்குப் பிறகுதான் இங்கே பெட்ரோல், டீசல் இல்லாமல் வாழ முடியாது என்கிற நிலை ஏற்பட்டது. இந்தியர் ஒருவர் சம்பாதிக்கும் 100 ரூபாயில் 70 ரூபாய் எரிபொருளுக்கே செலவு செய்கிற மாதிரி ஆகிவிடுகிறது. அவற்றின் விலை ஏறி இறங்குகிற அரசியல் பற்றி நமக்குத் தெரியாது.
டீசல் உலகின் அண்டர்கிரவுண்ட் ஏரியாவில் இருந்து ஒரு ஹீரோ உருவாகிறான். அவன் மூலம் இந்தப் பிரச்னையை பேசியிருக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களின் பார்வையிலிருந்து கதையைச் சொல்கிறேன். எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் அதை கமர்ஷியலாத்தான் சொல்ல வேண்டும். எளிமையான மக்களுக்கு எளிமையாக சொல்ல வேண்டும். அதைப் பொறுப்போடு சொல்கிறேன். என்கிறார்.