பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் 'டீசல்.' மணிவண்ணனின் உதவியாளர் சண்முகம் முத்துசாமி இயக்குகிறார். அதுல்யா ரவி, ஹரிஷ் ஜோடியாக நடிக்கிறார்.
இவர்கள் தவிர வினய் ராய், அனன்யா, கருணாஸ், ரமேஷ் திலக், விவேக் பிரசன்னா, சச்சின் கெடேகர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். திபு நினன் தாமஸ் இசை அமைக்கிறார், எம்.எஸ்.பிரபு, ரிச்சர்ட் என்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்கள். வருகிற 17ம் தேதி படம் வெளிவருகிறது.
படம் குறித்து இயக்குனர் சண்முகம் முத்துசாமி கூறியிருப்பதாவது: 'டீசல்' மக்களுக்கான படம். நாம் பெட்ரோல், டீசலைக் கடக்காத நாளில்லை. 1970க்குப் பிறகுதான் இங்கே பெட்ரோல், டீசல் இல்லாமல் வாழ முடியாது என்கிற நிலை ஏற்பட்டது. இந்தியர் ஒருவர் சம்பாதிக்கும் 100 ரூபாயில் 70 ரூபாய் எரிபொருளுக்கே செலவு செய்கிற மாதிரி ஆகிவிடுகிறது. அவற்றின் விலை ஏறி இறங்குகிற அரசியல் பற்றி நமக்குத் தெரியாது.
டீசல் உலகின் அண்டர்கிரவுண்ட் ஏரியாவில் இருந்து ஒரு ஹீரோ உருவாகிறான். அவன் மூலம் இந்தப் பிரச்னையை பேசியிருக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களின் பார்வையிலிருந்து கதையைச் சொல்கிறேன். எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் அதை கமர்ஷியலாத்தான் சொல்ல வேண்டும். எளிமையான மக்களுக்கு எளிமையாக சொல்ல வேண்டும். அதைப் பொறுப்போடு சொல்கிறேன். என்கிறார்.