வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் 'டீசல்.' மணிவண்ணனின் உதவியாளர் சண்முகம் முத்துசாமி இயக்குகிறார். அதுல்யா ரவி, ஹரிஷ் ஜோடியாக நடிக்கிறார்.
இவர்கள் தவிர வினய் ராய், அனன்யா, கருணாஸ், ரமேஷ் திலக், விவேக் பிரசன்னா, சச்சின் கெடேகர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். திபு நினன் தாமஸ் இசை அமைக்கிறார், எம்.எஸ்.பிரபு, ரிச்சர்ட் என்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்கள். வருகிற 17ம் தேதி படம் வெளிவருகிறது.
படம் குறித்து இயக்குனர் சண்முகம் முத்துசாமி கூறியிருப்பதாவது: 'டீசல்' மக்களுக்கான படம். நாம் பெட்ரோல், டீசலைக் கடக்காத நாளில்லை. 1970க்குப் பிறகுதான் இங்கே பெட்ரோல், டீசல் இல்லாமல் வாழ முடியாது என்கிற நிலை ஏற்பட்டது. இந்தியர் ஒருவர் சம்பாதிக்கும் 100 ரூபாயில் 70 ரூபாய் எரிபொருளுக்கே செலவு செய்கிற மாதிரி ஆகிவிடுகிறது. அவற்றின் விலை ஏறி இறங்குகிற அரசியல் பற்றி நமக்குத் தெரியாது.
டீசல் உலகின் அண்டர்கிரவுண்ட் ஏரியாவில் இருந்து ஒரு ஹீரோ உருவாகிறான். அவன் மூலம் இந்தப் பிரச்னையை பேசியிருக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களின் பார்வையிலிருந்து கதையைச் சொல்கிறேன். எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் அதை கமர்ஷியலாத்தான் சொல்ல வேண்டும். எளிமையான மக்களுக்கு எளிமையாக சொல்ல வேண்டும். அதைப் பொறுப்போடு சொல்கிறேன். என்கிறார்.




