ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
நடிகர் மோகன்லால் மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 45 வருடமாக கலை சேவை செய்து வருகிறார். இந்திய ராணுவத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாக தொடர்ந்து பல ராணுவப் படங்களில் நடித்ததால் கவுரவ லெப்டினன்ட் பதவியும் பெற்றுள்ளார். இந்த நிலையில் இவரது வாழ்நாள் சாதனையை போற்றும் விதமாக இந்தியாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டு சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி கையால் விருதையும் பெற்றார் மோகன்லால்.
இந்த நிலையில் கேரளாவிற்கு இந்த விருது மூலம் பெருமை தேடித்தந்த மோகன்லாலை கவுரவிக்கும் விதமாக கேரள மாநில அரசு ‛லால் சலாம்' என்கிற பெயரில் பிரமாண்ட விழா ஒன்றை நடத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் பலரும் திரையுலரை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மோகன்லாலை வாழ்த்தினர். இப்படி ஒரு விழா நடத்தி தன்னை கவுரவித்த கேரள அரசுக்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார்.