ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

நடிகர் மோகன்லால் மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 45 வருடமாக கலை சேவை செய்து வருகிறார். இந்திய ராணுவத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாக தொடர்ந்து பல ராணுவப் படங்களில் நடித்ததால் கவுரவ லெப்டினன்ட் பதவியும் பெற்றுள்ளார். இந்த நிலையில் இவரது வாழ்நாள் சாதனையை போற்றும் விதமாக இந்தியாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டு சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி கையால் விருதையும் பெற்றார் மோகன்லால்.
இந்த நிலையில் கேரளாவிற்கு இந்த விருது மூலம் பெருமை தேடித்தந்த மோகன்லாலை கவுரவிக்கும் விதமாக கேரள மாநில அரசு ‛லால் சலாம்' என்கிற பெயரில் பிரமாண்ட விழா ஒன்றை நடத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் பலரும் திரையுலரை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மோகன்லாலை வாழ்த்தினர். இப்படி ஒரு விழா நடத்தி தன்னை கவுரவித்த கேரள அரசுக்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார்.