இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

நடிகர் மோகன்லால் மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 45 வருடமாக கலை சேவை செய்து வருகிறார். இந்திய ராணுவத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாக தொடர்ந்து பல ராணுவப் படங்களில் நடித்ததால் கவுரவ லெப்டினன்ட் பதவியும் பெற்றுள்ளார். இந்த நிலையில் இவரது வாழ்நாள் சாதனையை போற்றும் விதமாக இந்தியாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டு சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி கையால் விருதையும் பெற்றார் மோகன்லால்.
இந்த நிலையில் கேரளாவிற்கு இந்த விருது மூலம் பெருமை தேடித்தந்த மோகன்லாலை கவுரவிக்கும் விதமாக கேரள மாநில அரசு ‛லால் சலாம்' என்கிற பெயரில் பிரமாண்ட விழா ஒன்றை நடத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் பலரும் திரையுலரை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மோகன்லாலை வாழ்த்தினர். இப்படி ஒரு விழா நடத்தி தன்னை கவுரவித்த கேரள அரசுக்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார்.