நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

நடிகர் மோகன்லால் மலையாள திரையுலகில் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக தனது திரையுலக பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவருக்கு பின் எத்தனையோ இளம் நடிகர்கள் வந்த பின்னரும் கூட, தற்போது வரை நம்பர் ஒன் இடத்திலேயே தொடர்ந்து பயணித்து வருகிறார். பல்வேறு விதமான கதையம்சம் கொண்ட படங்களிலும், கதாபாத்திரங்களிலும் நடித்து தேசிய விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அவரது திரையுலக பயணம், வாழ்நாள் சாதனை ஆகியவற்றை பாராட்டி கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு இந்தியாவில் மிக உயர்ந்த விருதான தாதா சாஹேப் பால்கே விருதை வழங்கி கவுரவித்தது.
இதன்மூலம் கேரளாவிற்கு மலையாள திரையுலகிற்கு மிகப்பெரிய கவுரவத்தை பெற்று தந்த மோகன்லாலுக்கு மிக பிரம்மாண்டமான விழா எடுத்து கவுரவிக்க இருக்கிறது கேரள அரசு. இந்த விழா வரும் அக்டோபர் நான்காம் தேதி ஞாயிற்றுக்கிழமை லால் சலாம் என்கிற தலைப்பில் நடைபெற இருக்கிறது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் கேரள கலை மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் சாஜி செரியன்.