இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

கார்த்திக், ஜீவிதா நடிப்பில் உருவான படம் 'தர்மபத்தினி'. கே.பாலச்சந்தரின் உதவியாளர் அமீர்ஜான் இந்த படத்தை இயக்கி இருந்தார். கவுண்டமணி, ராதாரவி, பூர்ணம் விஸ்வநாதன், சந்திரசேகர், சார்லி, விசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார், ரவிபாபு ஒளிப்பதிவு செய்திருந்தார்.
போலீஸ் ஹீரோ, ரவுடி வில்லன் மோதல் கதைதான். படத்தில் கார்த்திக் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருந்தார். ஜீவிதா கான்ஸ்டபிளாக நடித்திருந்தார். இருவரும் இளையராஜா கச்சேரிக்கு பாதுகாப்புக்கு செல்லும்போது அங்கு இளையராஜா பாடும் 'நான் தேடும் செவ்வந்திபூவிது...' பாடலால் ஈர்க்கப்பட்டு இருவரும் காதலில் விழுவார்கள்.
இந்த காட்சிக்காக நிஜமாகவே இளையராஜா திரையில் தோன்றி பாடுவார். பின்னர் அது டூயட்டாக மாறி கார்த்திக்கும், ஜீவிதாவும் ஆடுவார்கள். இந்த பாடலில் சில துணை நடிகைகள் போலீஸ் உடை அணிந்து ஆடுவது போன்று படமாக்கப்பட்டிருந்தது.
படத்தின் விளம்பரங்கள், போஸ்டர்களில் கார்த்திக்கும், ஜீவிதாவும் போலீஸ் உடையில் கட்டிப்பிடித்து நிற்பது போன்று இடம்பெற்றது. சென்னை அண்ணா சாலையில் கார்த்திக், ஜீவிதா போலீஸ் உடையில் கட்டிப்பிடித்திருப்பது போன்ற பெரிய கட்அவுட் வைக்கப்பட்டிருந்தது. இது பெண் போலீசின் கண்ணியத்தை குறைப்பதாக உள்ளது என்று அப்போது சட்டசபையில் பிரச்சினை கிளப்பப்பட்டது. இதனால் பின்னர் அந்த விளம்பர டிசைன்கள் நிறுத்தப்பட்டது, பாடலில் இடம்பெற்றிருந்த காட்சிகளும் நீக்கப்பட்டது.
பின்னாளில் இந்த பாடல் குறித்து இளையராஜா கூறும்போது "இந்தோளம் ராகத்தில் நான் உருகி உருகி பாடிய இந்த பாடலை படமாக்கிய விதம் பாடலின் ஜீவனை இழக்கச் செய்து விட்டது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.