Advertisement

சிறப்புச்செய்திகள்

மோகன்லாலுக்கு அக்., 4ல் விழா எடுத்து கவுரவிக்கும் கேரள அரசு | பிளாஷ்பேக்: சட்டசபையில் சர்ச்சையான 'தர்மபத்தினி' | மோகன்லாலின் ஜிம் பார்ட்னராக மாறிய திரிஷ்யம் பொண்ணு | பிளாஷ்பேக்: வில்லி வேடத்தில் கலக்கிய ஜெயலலிதாவின் சித்தி | டிக்கெட் கட்டண உயர்வை ரத்து செய்தது தெலுங்கானா அரசு | துவங்கியது கன்னட பிக்பாஸ் சீசன் 12 : பிடிவாதம் தளர்த்தி மீண்டும் இணைந்த கிச்சா சுதீப் | புதிய சிக்கல்களில் விஜய்யின் 'ஜன நாயகன்' | துல்கர் சல்மானுக்கு சொந்தமான மூன்றாவது காரை பறிமுதல் செய்த சுங்கத்துறை | புதிய தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கும் சூர்யா | மோகன்லாலின் ராவண பிரபு ரீ ரிலீஸ் தேதி அறிவிப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: வில்லி வேடத்தில் கலக்கிய ஜெயலலிதாவின் சித்தி

30 செப், 2025 - 12:06 IST
எழுத்தின் அளவு:
Flashback-Jayalalithaas-aunt-plays-the-villain
Advertisement


ஜெயலலிதாவை உலகத்திற்கே தெரியும். அவரது தாயார் சந்திபா பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒரு காலத்தில் ஸ்டைலிஷான வில்லி வேடங்களில் கலக்கிய ஜெயலலிதாவின் சித்தி வித்யாபதி பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். சந்தியா, ஜெயலலிதா இருவரையுமே சினிமாவுக்கு கொண்டு வந்தவர் அவர்தான்.

அவரை அடையாளம் காண 'அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தை சொல்லலாம். அதில் எம்ஜிஆரின் அண்ணன் சக்கரபாணியின் மனைவியாக வில்லித்தனமான சலீமா கேரக்டரில் நடித்தவர்தான் வித்யாவதி. விமான பணிப்பெண்ணாக இருந்த வித்யாவதி சினிமாவில் நடிக்க ஆசை கொண்டு அந்த பணியை விட்டுவிட்டு வந்தார்.

கவர்ச்சியான தோற்றமும், வெளிப்படையான சுபாவமும் உள்ளவராக இருந்த வித்யாவதியின் இயற்பெயர் அம்புஜவல்லி. சினிமாவிற்காக வித்யாவதி என்று மாற்றிக் கொண்டார். 1951ம் ஆண்டு திரையுலகிற்கு வந்தார். இவரது வருகைக்குப் பின்னரே இவரது அக்கா சந்தியா திரையுலகில் நுழைந்தார்.

அன்றைய பிரபல நடிகரும், தயாரிப்பாளர், இயக்குநருமான சித்தூர் வி.நாகையா 1953ம் ஆண்டு தயாரித்து, நடித்த 'என் வீடு' படத்தில் வித்யாவதி வில்லி வேடத்தில் அறிமுகமானார். பானுமதி இயக்கிய 'சண்டி ராணி' படத்திலும் வில்லியாக நடித்தார்.

அன்றைய சென்னையில் பெரும் கோடீஸ்வரர்கள் வாழ்ந்த பகுதியான ஆழ்வார்பேட்டையில் முதன் முதலில் பங்களா கட்டி குடியேறினார். சொந்த கார் வாங்கி அதை தானே ஓட்டிச் சென்றார். சிகரெட் புகைத்தபடியே கார் ஓட்டுவது அவருக்கு பிடித்தமான ஒன்றாக இருந்தது.

'நடசேகரா' என்ற கன்னடப் படத்தில் சந்தியாவும் வித்யாவதியும் இணைந்து நடித்தார்கள். இந்த படம் 'மனோரதம்' என்ற பெயரில் தமிழில் வெளிவந்தது. வித்யாவதி, சந்தியா, ஜெயலலிதா மூவரும் இணைந்து நாடகத்தில் நடித்துள்ளனர்.
பின்னாளில் சினிமாவை விட்டு விலகிய இவர் திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் செட்டிலானார். அங்கு ஒரு பள்ளியை தொடங்கினார். இப்போது அந்த பள்ளி அவரின் வாரிசுகளால் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
டிக்கெட் கட்டண உயர்வை ரத்து செய்தது தெலுங்கானா அரசுடிக்கெட் கட்டண உயர்வை ரத்து செய்தது ... பிளாஷ்பேக்: சட்டசபையில் சர்ச்சையான 'தர்மபத்தினி' பிளாஷ்பேக்: சட்டசபையில் சர்ச்சையான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in