வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

தமிழ் சினிமாவில் பாடல்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் இருக்கும். அதுவும் 1980களில் இளையராஜாவின் வருகைக்குப் பிறகு பாடல்களின் முக்கியத்துவம் இன்னும் அதிகரித்தது. இப்படியான சூழலில் பாடல்களே இல்லாமல் வெளிவந்த படம் 'வண்ணக் கனவுகள்'.
இந்தப் படம் எம்டி வாசுதேவ நாயர் எழுதிய 'அடியொழுக்கு' என்ற மலையாள படத்தின் ரீமேக் ஆகும். மலையாள படத்தை ஐ வி சசி இயக்கியிருந்தார். மம்முட்டி மோகன்லால் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்ததற்காக மம்முட்டிக்கு மாநில அரசின் சிறந்த நடிகர் வருது கிடைத்தது.
தமிழ் பதிப்பை கே. பாலச்சந்தரின் உதவி இயக்குனர் அமீர்ஜான் இயக்கியிருந்தார். இந்த படத்தை பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்திருந்தது.
மம்முட்டி நடித்த கேரக்டரில் கார்த்தியும், மோகன்லால் நடித்த கேரக்டரில் முரளியும் நடித்தனர். படத்திற்கு ஷியாம் பின்னணி இசைத்திருந்தார். பாடல்கள் இல்லாவிட்டாலும் இந்த படம் பெரிய வரவேற்பு பெற்றது. 25க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது.




