இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானாவில் புதிய படங்கள் வெளியாகும் போது அவற்றிற்கு சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்து அரசாணை பிறப்பிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.
பவன் கல்யாண் நடித்து கடந்த வாரம் வெளியான 'ஓஜி' படத்திற்கு அப்படியான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தெலுங்கானா அரசு வெளியிட்ட ஆணையை எதிர்த்து ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி வழக்கை அடுத்த மாதத்திற்குத் தள்ளி வைத்தார்.
இதனிடையே, டிக்கெட் கட்டண உயர்வுக்காக பிறப்பித்த அரசாணையை ரத்து செய்வதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. அதனால், பழைய கட்டணத்தில் ரசிகர்கள் இனி அப்படத்தைப் பார்க்க முடியும். இன்று முதல் அது அமலுக்கு வருகிறது.
எதிர்வரும் காலங்களில் புதிய படங்களுக்கு டிக்கெட் கட்டண உயர்வு அளிப்பதை தெலங்கானா அரசு கைவிடும் எனத் தெரிகிறது.