தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர், சிவாஜியை மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்க விரும்பிய ஏ வி எம் | திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: தயாரிப்பாளர்கள் குமுறல் | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! |

கடைசியாக ‛சுபம்' என்ற தெலுங்கு படத்தை தயாரித்து அதில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் சமந்தா. அந்தப் படத்தை தொடர்ந்து தனது த்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் சார்பாக ‛மா இண்டி பங்காரம்' என்ற ஒரு படத்தையும் தயாரித்து தான் கதையின் நாயகியாக நடிக்கப் போவதாக ஓராண்டுக்கு முன்பாகவே அறிவித்திருந்தார் சமந்தா. ஆக்சன் கதையில் உருவாகும் அப்படத்தின் ஸ்கிரிப்ட் ஒர்க் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த சமந்தா தனது அடுத்த படம் குறித்த ஒரு தகவல் கொடுத்திருக்கிறார்.
அதில், ‛‛எனது அடுத்த தெலுங்கு படம் ‛மா இண்டி பங்காரம்'. இந்த படத்தை என்னுடைய த்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நந்தினி ரெட்டி இந்த படத்தை இயக்குகிறார். இம்மாதம் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.