மூன்றாம் பாலினத்தவர்கள் கடவுளின் குழந்தைகள்: ஆசிம் கெதர்பால் | வாரிசு நட்சத்திரங்களால் பல வாய்ப்புகளை இழந்தேன் ; கிர்த்தி சனோன் வேதனை | 'திரிஷ்யம் 2'வில் இடம்பெறாத கலாபவன் சாஜன் 'திரிஷ்யம் 3'ல் ரீ என்ட்ரி | நான் செட்டாகவில்லை ; அமீர்கானிடம் ஓப்பனாக கூறிய சாய் பல்லவி | கிளாமர் புகைப்படங்களைப் பகிர்ந்து அதிர்ச்சி தந்த பூஜா ஹெக்டே | 'லவ் டுடே' நடிகை ரவீனா ரவி திருமணம்; மலையாள இயக்குனர் தேவனை கரம்பிடித்தார் | மஞ்சு வாரியரின் அதிகாலை ஸ்கூட்டி பயணமும் குதிரையேற்ற பயிற்சியும் | தமிழக முதல்வராக விஜய் பதவி ஏற்ற சில மணி நேரத்தில் நடிகர் விஷால் வைத்த கோரிக்கைகள் | நயன்தாரா எனக்கு அக்கா... ஏன்னா? சென்னையில் ஸ்ரீலீலா சொன்ன விஷயம் | சினிமா பிரபலங்களின் வாழ்த்து மழையில் முதல்வர் விஜய் |

தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் கல்யாணி பிரியதர்ஷன். அதன் பிறகு தற்போது ‛ஜீனி, மார்ஷல்' போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும், மலையாளத்தில் டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள ‛லோகா சாப்டர்-1' என்ற படம் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி திரைக்கு வந்து 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து இருக்கிறது. லோகா படத்தில் அவரது நடிப்பை பார்த்துவிட்டு பல பாலிவுட் நடிகைகளும் பெருமையாக பேசி இருந்தார்கள்.
இந்த நிலையில் லோகா படத்தின் வெற்றி மூலம் தனக்கு கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு குறித்து கல்யாணி பிரியதர்ஷன் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ‛‛லோகா படத்தின் மூலம் இந்திய அளவில் நான் கவனம் பெற்று விட்டேன். இது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. என்றாலும் இந்த வெற்றி, புகழ்ச்சியை நான் தலையில் ஏற்றிக்கொள்ள மாட்டேன். தொடர்ந்து சினிமாவுக்காக கடினமான உழைப்பை கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன். இன்னும் நிறைய படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்'' என தெரிவித்திருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.