வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

தற்போது எச்.வினோத் இயக்கியுள்ள ‛ஜனநாயகன்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.,9ல் திரைக்கு வருகிறது. மேலும் இதுவே என்னுடைய கடைசி படம் என்று அறிவித்துள்ள விஜய், அடுத்தபடியாக முழு நேர அரசியலுக்கும் வந்துள்ளார். இப்படியான நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் அவர் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு கரூருக்கு செல்லாத விஜய், விரைவில் அங்கு செல்வதற்கு டிஜிபி அலுவலகத்தில் இன்றைய தினம் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மரணம் அடைந்துள்ள நிலையில் இறுதி அஞ்சலி செலுத்த விஜயின் தந்தையான இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சென்று இருந்தார். அப்போது மீடியாக்கள் அவரிடத்தில், கரூரில் விஜய் பிரசாரத்தின் போது 41 பேர் இறந்தது குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு எஸ்.ஏ.சந்திரசேகரன், ‛‛இப்போது நான் ஒருவரது இறப்புக்கு வந்திருக்கிறேன். இந்த நேரத்தில் இது போன்ற கேள்வி கேட்கலாமா? ஏற்கனவே நாங்கள் அந்த சம்பவத்தினால் மனதளவில் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளோம் '' என்று சற்று கோபமாக பதில் கொடுத்துள்ளார்.




