Advertisement

சிறப்புச்செய்திகள்

இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா | உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி | ஹைப்பர் லிங் ஜார்னரில் உருவாகும் 'தி ஒன்' | சலீம் குமார் இறுதி சடங்கில் யு டியூப்பர்கள் அட்டகாசம் : போலீஸ் எச்சரிக்கை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல்

08 அக், 2025 - 04:17 IST
எழுத்தின் அளவு:
Mohanlal-became-a-superstar-because-he-never-acted-in-Adoors-films:-Actor-Baiju
Advertisement


மலையாள திரையுலகில் மோகன்லாலின் 45 வருட கலைச்சேவை மற்றும் அவரது வாழ்நாள் சாதனை ஆகியவற்றை கவுரவிக்கும் விதமாக சமீபத்தில் மத்திய அரசு அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்தது. இந்த விருதை பெற்ற மோகன்லாலை தனது பங்கிற்கு கேரள மாநில அரசும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரம்மாண்ட விழா எடுத்து பாராட்டியது.

இந்த நிகழ்வில் மூத்த எழுத்தாளரும் இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசும்போது, “20 வருடங்களுக்கு முன்பு நான் இப்படி தாதா சாகேப் பால்கே விருது வாங்கியபோது யாரும் எனக்கு விழா எடுத்து கவுரவிக்கவில்லை. முதல்வர் பினராயி விஜயன் தனி கவனம் எடுத்து மோகன்லாலுக்கு இந்த விழாவை நடத்துகிறார்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் “இத்தனை வருடங்களில் மோகன்லால் என்னுடைய ஒரு படத்தில் கூட நடித்தது இல்லை. காரணம் மோகன்லால் எனது கதைகளுக்கு பொருந்தமாட்டார்” என்றும் கூறினார். இவரது இந்த பேச்சு சோசியல் மீடியாவில் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. இந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகரான பைஜூ சந்தோஷ் இது குறித்து கூறும்போது, “அடூர் கோபாலகிருஷ்ணன் டைரக்ஷனில் மோகன்லால் நடிக்காததால் தான் அவர் இந்த சூப்பர் ஸ்டார் என்கிற நிலைக்கு வர முடிந்தது” என்று கிண்டலாக தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்விதுல்கர் சல்மான் கார் பறிமுதல் ... திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap