ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

மலையாள திரையுலகில் மோகன்லாலின் 45 வருட கலைச்சேவை மற்றும் அவரது வாழ்நாள் சாதனை ஆகியவற்றை கவுரவிக்கும் விதமாக சமீபத்தில் மத்திய அரசு அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்தது. இந்த விருதை பெற்ற மோகன்லாலை தனது பங்கிற்கு கேரள மாநில அரசும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரம்மாண்ட விழா எடுத்து பாராட்டியது.
இந்த நிகழ்வில் மூத்த எழுத்தாளரும் இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசும்போது, “20 வருடங்களுக்கு முன்பு நான் இப்படி தாதா சாகேப் பால்கே விருது வாங்கியபோது யாரும் எனக்கு விழா எடுத்து கவுரவிக்கவில்லை. முதல்வர் பினராயி விஜயன் தனி கவனம் எடுத்து மோகன்லாலுக்கு இந்த விழாவை நடத்துகிறார்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் “இத்தனை வருடங்களில் மோகன்லால் என்னுடைய ஒரு படத்தில் கூட நடித்தது இல்லை. காரணம் மோகன்லால் எனது கதைகளுக்கு பொருந்தமாட்டார்” என்றும் கூறினார். இவரது இந்த பேச்சு சோசியல் மீடியாவில் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. இந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகரான பைஜூ சந்தோஷ் இது குறித்து கூறும்போது, “அடூர் கோபாலகிருஷ்ணன் டைரக்ஷனில் மோகன்லால் நடிக்காததால் தான் அவர் இந்த சூப்பர் ஸ்டார் என்கிற நிலைக்கு வர முடிந்தது” என்று கிண்டலாக தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.




