இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

மலையாள திரையுலகில் மோகன்லாலின் 45 வருட கலைச்சேவை மற்றும் அவரது வாழ்நாள் சாதனை ஆகியவற்றை கவுரவிக்கும் விதமாக சமீபத்தில் மத்திய அரசு அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்தது. இந்த விருதை பெற்ற மோகன்லாலை தனது பங்கிற்கு கேரள மாநில அரசும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரம்மாண்ட விழா எடுத்து பாராட்டியது.
இந்த நிகழ்வில் மூத்த எழுத்தாளரும் இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசும்போது, “20 வருடங்களுக்கு முன்பு நான் இப்படி தாதா சாகேப் பால்கே விருது வாங்கியபோது யாரும் எனக்கு விழா எடுத்து கவுரவிக்கவில்லை. முதல்வர் பினராயி விஜயன் தனி கவனம் எடுத்து மோகன்லாலுக்கு இந்த விழாவை நடத்துகிறார்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் “இத்தனை வருடங்களில் மோகன்லால் என்னுடைய ஒரு படத்தில் கூட நடித்தது இல்லை. காரணம் மோகன்லால் எனது கதைகளுக்கு பொருந்தமாட்டார்” என்றும் கூறினார். இவரது இந்த பேச்சு சோசியல் மீடியாவில் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. இந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகரான பைஜூ சந்தோஷ் இது குறித்து கூறும்போது, “அடூர் கோபாலகிருஷ்ணன் டைரக்ஷனில் மோகன்லால் நடிக்காததால் தான் அவர் இந்த சூப்பர் ஸ்டார் என்கிற நிலைக்கு வர முடிந்தது” என்று கிண்டலாக தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.