விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் | தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் |
சின்னத்திரை நடிகர்கள் போதுமான வருமானம் இல்லாமல் மற்றும் குடும்ப பிரச்சினைகள் காரணமாக சமீபகாலமாக தற்கொலைகளில் ஈடுபட்டு வருவது நடிகர் - நடிகைகள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதனால் இந்த தற்கொலைகளுக்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்று அனைவருமே குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று சென்னையிலுள்ள சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது சின்னத்திரை நடிகர் - நடிகைகளின் நலன் காக்கும் வகையில் சில செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
குறிப்பாக, டப்பிங் சீரியல்களின் வரவினால், தமிழில் தயாரிக்கப்படும் சீரியல்களில் எண்ணிக்கை குறைகிறது. அதனால் நடிகர் நடிகைகளுக்கு வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. மேலும், சின்னத்திரை நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாதவர்கள் சீரியல்களில் நடிப்பதால் உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போகிறது என்பது போன்ற விசயங்கள் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், போதிய வருமானம் இல்லாமல் இருக்கும் உறுப்பினர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து அவர்களை பாதுகாப்பது எனவும் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, 1500 உறுப்பினர்கள் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத்தில் 400-க்கும் மேற்பட்டவர்கள் வேறு வேலைகளில் இருப்பவர்களாம். சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு வீடு வழங்கப்படும் என்று முன்பு ஒருமுறை அறிவிப்பு வெளியானபோது, நடிகர்களாக அல்லாத பலரும் உறுப்பினராகி விட்டார்களாம். அதனால் இப்போது சீரியல்களில் நடிக்காத மற்ற உறுப்பினர்களை பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கை நடைபெறுகிறதாம். மேலும், சின்னத்திரை நடி கர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இனிமேல் மாதந்தோறும் சின்னத்திரை நடிகர் சங்க மீட்டிங் நடைபெற உள்ளதாம்.