Advertisement

சிறப்புச்செய்திகள்

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா | பிளாஷ்பேக்: 'மூன்று முடிச்சு' படத்தின் மூலம் ஹீரோவாக்க நினைத்த பாலச்சந்தர்: மறுத்த ஜெயபாரதி | பெண் வேடத்தில் அசார் | இனி யு-டியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுக்க மாட்டேன் : சுசித்ரா திடீர் முடிவு | 'தி கோட்', விஜய்யின் விஎப்எக்ஸ் பணிகள் நிறைவு | கமலின் தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | எல்லா படங்களுக்கும் கதாநாயகி அவசியம் இல்லை : நிகிலா விமல் | ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்ட பிரபாஸ் | மீண்டும் ஷாரூக்கான் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | ஆளே இல்லாத நடிகர் சூர்யா வீட்டுக்கு பாதுகாப்பு : அமைச்சரின் பரிந்துரையில் கட்டணமின்றி சலுகை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பிரபல சினிமா தயாரிப்பாளர் சவுந்தர்ய ஜெகதீஷ் தற்கொலை

15 ஏப், 2024 - 10:59 IST
எழுத்தின் அளவு:
Famous-film-producer-Soundarya-Jagadish-committed-suicide

மஹாலட்சுமி லே அவுட் : கன்னட திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் சவுந்தர்ய ஜெகதீஷ், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரின் மஹாலட்சுமி லே அவுட்டில் வசித்தவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சவுந்தர்ய ஜெகதீஷ், 55. இவர் அப்பு பப்பு, மஸ்த் மஜா மாடி, ஸ்னேஹிதரு, ராம்லீலா உட்பட சில படங்களை தயாரித்தார். அனைத்து படங்களும் சூப்பர் ஹிட்டாக ஓடி வருவாயும் கிடைத்தது. பட தயாரிப்பு மட்டுமின்றி, ரியல் எஸ்டேட் தொழிலும் செய்தார். பெங்களூரில், 'ஜெட்லாக்' என்ற பெயரில் பப் நடத்துகிறார். சமீபத்தில் நடிகர் தர்ஷன் நடித்த காட்டேரா படத்தின் வெற்றியை கொண்டாட, இந்த பப்பில் தான் பார்ட்டி நடந்தது.

நிர்ணயித்த நேரத்தை விட, அதிக நேரம் பார்ட்டி நடந்தது குறித்து, சுப்ரமண்யநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவானது. தர்ஷன், ராக்லைன் வெங்கடேஷ் உட்பட எட்டு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. வழக்கு தொடர்பாக, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. திரைப்படம் ஒன்றில் தன் மகனை ஹீரோவாக அறிமுகம் செய்யவும், சவுந்தர்ய ஜெகதீஷ் திட்டமிட்டிருந்தார். இதற்காக ஏற்பாடுகளும் செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை, 9:00 மணிக்கு மேலாகியும், இவரது அறைக்கதவு திறக்கப்படவில்லை, தட்டியும் பதில் இல்லை. சந்தேகமடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்து பார்த்த போது, சவுந்தர்ய ஜெகதீஷ், துாக்கில் தொங்குவது தெரிந்தது. உடனடியாக கீழே இறக்கி, மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பரிசோதித்த டாக்டர், ஜெகதீஷ் இறந்து விட்டதாக கூறினர்.

இவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. இவரது மாமியார் சமீபத்தில் காலமானார். இவர் மீது ஜெகதீஷ் அதிகமான அன்பு வைத்திருந்தார். மன அழுத்தத்தில் இருந்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர். பொருளாதார பிரச்னையும் இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தயாரிப்பாளர் சவுந்தர்ய ஜெகதீஷின் மறைவுக்கு, திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மஹாலட்சுமி லே அவுட் போலீஸ் நிலையத்தில், வழக்கு பதிவாகிஉள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் போல ஒரு கதையை என்னால் யோசிக்க முடியாது: வினீத் சீனிவாசன்முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் போல ஒரு ... ராம் சரணுக்கு டாக்டர் பட்டம்: சிரஞ்சீவி நெகிழ்ச்சி ராம் சரணுக்கு டாக்டர் பட்டம்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in