Advertisement

சிறப்புச்செய்திகள்

இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

77 லட்சம் மோசடி செய்ததாக நடிகை ஆலியா பட்டின் முன்னாள் பெண் உதவியாளர் கைது

10 ஜூலை, 2025 - 04:02 IST
எழுத்தின் அளவு:
Actress-Alia-Bhatts-former-female-assistant-arrested-for-fraud-of-Rs-77-lakh
Advertisement

பாலிவுட்டில் வாரிசு நடிகைகளில முக்கியமானவர் ஆல்யா பட். ‛ஆர்ஆர்ஆர்' படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் ரசிகர்களிடம் பிரபலமானார். இவரிடம் 2021 முதல் 2024 வரை பர்சனல் செகரட்டரி ஆக பணிபுரிந்த வேதிகா ஷெட்டி என்பவர் 77 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டார் என்கிற புகாரின் பேரில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதமே இவர் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

கடந்த 2022 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் தான் ஆலியா பட்டுக்கு தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக செலவு கணக்குகளில் பணத்தை கையாடல் செய்து ஆலியா பட்டின் கையெழுத்தையும் முறைகேடாக பயன்படுத்தி இந்த பணத்தை எல்லாம் தனது நண்பர் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு செல்லுமாறு மாற்றி அதன்பிறகு தனது வங்கி கணக்கிற்கு அதை திரும்ப பெற்றுக் கொண்டுள்ளார் வேதிகா ஷெட்டி.

இந்த மோசடியை ஆலியா பட்டின் தாய் சோனி ரஸ்தான் கண்டுபிடித்து மும்பை ஜூஹு போலீஸில் கடந்த ஜனவரி மாதம் புகார் அளித்திருந்தார். ஆனால் இதைத் தொடர்ந்து தலைமறைவான வேதிகா அதன்பிறகு ராஜஸ்தான், கர்நாடகா, அங்கிருந்து புனே இறுதியாக பெங்களூரு சென்று மாறி மாறி போலீசாரை அலைக்கழித்தார், ஒரு வழியாக தற்போது பெங்களூரில் அவர் இருப்பதை அறிந்த போலீசார் அவரை கைது செய்து மும்பைக்கு அழைத்து வந்து நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர்.

இதற்கு முன்னதாக இவர் நடிகை ஊர்வசி ரவுட்டேலாவிடம் இரண்டு வருடங்கள் உதவியாளராக பணிபுரிந்த போதும் இப்படி மோசடி செய்து பணம் கையாடல் செய்துள்ளார் என்று இவரது இந்த கைது நடவடிக்கைக்கு பின்பு ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் நடிகை ஊர்வசி ரவுட்டேலாவின் தாயார் மீரா ரவுட்டேலா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
டான் 3ம் பாகத்தில் இணைந்த கிர்த்தி சனோன்!டான் 3ம் பாகத்தில் இணைந்த கிர்த்தி ... பிக் பாஸ் ஹிந்தி சீசன் 19ல் புதிய மாற்றங்கள் பிக் பாஸ் ஹிந்தி சீசன் 19ல் புதிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in