நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் நடித்த 'ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா' சுருக்கமாக ‛ஜேஎஸ்கே' என்ற மலையாளப் படம் கடந்த மாதம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு படத்தின் டைட்டிலில் ஜானகி என்ற பெயரை நீக்க வேண்டும். அதோடு படத்தின் வசனத்தில் வரும் ஜானகி என்ற சொல்லையும் நீக்கினால்தான் படத்திற்கு சான்றிதழ் தர முடியும் என்று கூறிவிட்டது. இதனால் படம் திட்டமிட்டபடி வெளிவரவில்லை.
இதை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நீதிபதி கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தை பார்த்தார். இந்த நிலையில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. தணிக்கை குழு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் படத்தில் கதாபாத்திரத்தின் பெயர் ஜானகி வித்யாதரன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே படத்தின் பெயரை வி. ஜானகி என்றோ ஜானகி, வி என்றோ மாற்றலாம்.
மேலும் நீதிமன்ற காட்சிகளில் குறுக்கு விசாரணையின் போது 2 இடங்களில் ஜானகி என்ற பெயரை மியூட் செய்ய வேண்டும். மற்ற இடங்களில் ஜானகியின் பெயரை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த மாற்றங்களை செய்தால் உடனடியாக படத்திற்கு அனுமதி அளிக்கத் தயார். என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை படத்தின் தயாரிப்பாளர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணையை 16ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.