திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
மலையாள திரையுலகின் இளம் இயக்குனர், நடிகர் வினீத் சீனிவாசனுக்கு என தனியாக ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது. தமிழகத்தில் கூட இவரது படங்களுக்கு என ஒரு வரவேற்பு இருக்கிறது. சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள 'வருஷங்களுக்கு சேஷம்' திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் என்கிற படத்தில் நடித்திருந்தார். இதில் வில்லத்தனம் கலந்த ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிப்பில் புதிய பரிமாணம் காட்டி இருந்தார் வினித் சீனிவாசன்.
அதே சமயம் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் போன்ற கதைகளை என்னால் ஒருபோதும் யோசிக்கக்கூட முடியாது. என்னுடைய பாதை அது அல்ல. அதேசமயம் ஒரு நடிகராக அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பதில் எனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. இத்தனைக்கும் அந்த படத்தின் இயக்குனர் அபினவ் சுந்தர் நாயக் என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான். என் உதவியாளர் என்பதால் என்னைப் போன்றே தான் படங்கள் பண்ண வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவருடைய சிந்தனை வேறு. என்னுடைய சிந்தனை வேறு” என்று கூறியுள்ளார் வினீத் சீனிவாசன்.