எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
மலையாள திரையுலகில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமையாளராக வலம் வருபவர் இயக்குனர் வினீத் சீனிவாசன். கடந்தாண்டு இவர் இயக்கத்தில் மோகன்லால் மகன் பிரணவ் நடிப்பில் வெளியான ஹிருதயம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவில் உள்ள வரநாடு என்கிற பகுதியில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் மற்றும் மலையாள பாடல்களை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் வினீத் சீனிவாசன்.
அதேசமயம் அந்த நிகழ்வில் அவர் விழா மேடையில் இருந்து வாசலுக்கு செல்லும் நடைபாதையில் வேகமாக ஓடிவருவது போன்று ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. குறிப்பாக ரசிகர்களின் சந்திப்பை தவிர்க்கவும் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காகவும் அவர் அப்படி ஓடினார் என பலரும் கிண்டல் அடித்தும் வந்தார்கள்.
இந்த நிலையில் இதுபற்றி விளக்கம் அளித்துள்ள வினீத் சீனிவாசன், “அந்த விழாவிற்கு நான் வருகை தந்தபோது கோவில் நிர்வாகத்தின் விதிமுறைகளின்படி அங்கே காரை நிறுத்துவதற்கு அனுமதி கிடைக்கவில்லை.. நான் கிளம்பும் நேரம் வந்ததும் வெளியே அவ்வளவு கூட்ட நெரிசல்களுக்கு இடையே தான் என்னுடைய கார் என்னை பிக்கப் செய்துகொள்ள வந்து கொண்டிருந்தது. நான் வேகமாக சென்றால்தான் மேலும் ட்ராபிக்கை ஏற்படுத்தாமல் காரில் ஏறி செல்ல முடியும் என்பதற்காக தான் சற்றே வேகமாக சென்றேன். ஆனால் அப்படி நான் சென்றதை இந்த விதமாக கிண்டல் அடிப்பார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை” என கூறியுள்ளார்.