வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

மலையாள திரையுலகில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமையாளராக வலம் வருபவர் இயக்குனர் வினீத் சீனிவாசன். கடந்தாண்டு இவர் இயக்கத்தில் மோகன்லால் மகன் பிரணவ் நடிப்பில் வெளியான ஹிருதயம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவில் உள்ள வரநாடு என்கிற பகுதியில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் மற்றும் மலையாள பாடல்களை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் வினீத் சீனிவாசன்.
அதேசமயம் அந்த நிகழ்வில் அவர் விழா மேடையில் இருந்து வாசலுக்கு செல்லும் நடைபாதையில் வேகமாக ஓடிவருவது போன்று ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. குறிப்பாக ரசிகர்களின் சந்திப்பை தவிர்க்கவும் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காகவும் அவர் அப்படி ஓடினார் என பலரும் கிண்டல் அடித்தும் வந்தார்கள்.
இந்த நிலையில் இதுபற்றி விளக்கம் அளித்துள்ள வினீத் சீனிவாசன், “அந்த விழாவிற்கு நான் வருகை தந்தபோது கோவில் நிர்வாகத்தின் விதிமுறைகளின்படி அங்கே காரை நிறுத்துவதற்கு அனுமதி கிடைக்கவில்லை.. நான் கிளம்பும் நேரம் வந்ததும் வெளியே அவ்வளவு கூட்ட நெரிசல்களுக்கு இடையே தான் என்னுடைய கார் என்னை பிக்கப் செய்துகொள்ள வந்து கொண்டிருந்தது. நான் வேகமாக சென்றால்தான் மேலும் ட்ராபிக்கை ஏற்படுத்தாமல் காரில் ஏறி செல்ல முடியும் என்பதற்காக தான் சற்றே வேகமாக சென்றேன். ஆனால் அப்படி நான் சென்றதை இந்த விதமாக கிண்டல் அடிப்பார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை” என கூறியுள்ளார்.




