ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா |
கடந்த வருடம் மலையாளத்தில் குறைந்த பட்ஜெட்டில் வெளியான மூன்று படங்கள் 50 கோடி முதல் 100 கோடி வரை வசூலித்து மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தின. இந்த நிலையில் இந்த வருடம் துவங்கி இரண்டு மாதங்கள் முடிய உள்ள நிலையில் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி மலையாளத்தில் வெளியான ரொமான்சம் என்கிற படம் தற்போது இந்த வருடத்தின் முதல் படமாக 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது. சித்து மாதவன் இயக்கிய இந்தப்படத்தை ஜான் பால் ஜார்ஜ் என்பவர் தயாரித்திருந்தார்.
இந்த படத்தை வெளியிடுவதற்கு முன் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜான் பால் ஜார்ஜ் ரசிகர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பில், தன்னிடம் இருந்த அனைத்தையும் இந்த படத்தில் முதலீடு செய்து விட்டதாகவும், இந்த படம் ரிலீஸ் மற்றும் வியாபாரம் குறித்து தான் போட்ட கணக்குகள் எல்லாம் சற்றே மாறி தற்போது எல்லாம் முடங்கி ஸ்தம்பித்த நிலையில் இருப்பதாகவும் இந்த படத்திற்காக நீங்கள் டிக்கெட் எடுப்பதற்கு முன்பு யோசிக்கும் அந்த தருணம் தான் எனது வாழ்க்கையை தீர்மானிக்கும் என்றும் இதைவிட அதிகமாக கெஞ்சுவதற்கு எனது தன்மானம் இடம் தரவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த படம் வெளியாகி தற்போது 25 நாட்கள் ஆன நிலையில் கேரளா மற்றும் மற்ற மாநிலங்கள், இது தவிர ஓவர்சீஸ் உரிமை என 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து இந்த வருடத்தில் 50 கோடி வசூலித்த முதல் மலையாள படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது. இந்த படம் வெறும் ஐந்து கோடியில் தயாரானது என்பதும் ஹாரர் கலந்த காமெடி படமாக உருவாகிய இந்த படத்தில் மிகப்பெரிய அளவில் முன்னணி நட்சத்திரங்கள் யாரும் நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.