எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி கடந்த வருடம் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ராஜமவுலியின் முந்தைய பாகுபலி படத்தை விட இந்த படம் வெளிநாட்டு ரசிகர்களாலும் ஹாலிவுட் பிரபலங்களாலும் அதிகம் பாராட்டப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல பல சர்வதேச விருதுகளையும் வென்று ஆஸ்கர் ரேஸிலும் நுழைந்துள்ளது. இந்தநிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஹாலிவுட் கிரிட்டிக் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட இந்த படத்திற்கு நான்கு பிரிவுகளில் விருதுகள் கிடைத்தன
இந்த விருது வழங்கும் நிகழ்வில் இயக்குனர் ராஜமவுலி, ராம்சரண், இசையமைப்பாளர் மரகதமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டாலும் படத்தின் இன்னொரு நாயகனான ஜூனியர் என்டிஆர் கலந்து கொள்ளவில்லை. இதனைத்தொடர்ந்து எங்குமே ராம்சரணே முன்னிலைப்படுத்தப்பட்டதால் இந்த படத்தின் வெற்றியை அவர் தனக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொண்டதாக தெலுங்கு ரசிகர்கள் குறிப்பாக ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்தநிலையில் இந்த சர்ச்சை விருது வழங்கும் குழுவினரின் கவனத்திற்கும் சென்றது. இதை தொடர்ந்து அவர்கள் விளக்கம் அளிக்கும் விதமாக தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் கூறும்போது, “ஜூனியர் என்டிஆருக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ள நாங்கள் அழைப்பு அனுப்பியுள்ளோம். அவருக்காக விருது ஒன்றும் வழங்கப்பட இருந்தது. ஆனால் அவர் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருவதாலும் சமீபத்தில் அவரது சகோதரர் மரணம் ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாகவும் அவர் இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை என்று அவரது தரப்பிலிருந்து எங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது. விரைவில் அவர் இந்த விருதை எங்களிடம் நேரில் பெற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம்” எனக் கூறி ரசிகர்களின் சண்டைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.