'கூலி' பற்றி ஆமிர்கான் எதுவுமே பேசவில்லை: அவர் தரப்பு விளக்கம் | அதிக சலுகைகள் பெறும் நடிகர்கள்: ஆமிர்கான் காட்டம் | 'மிராய்' பட்ஜெட் 60 கோடிதானா? | சவுபின் சாஹிர் வெளிநாடு செல்ல தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு | நம்நாடு, சந்திரமுகி, பார்க்கிங் - ஞாயிறு திரைப்படங்கள் | இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | இளையராஜாவிற்கு பாராட்டு விழா : அரங்கம் அதிர இன்னிசை மழை ; முதல்வர், ரஜினி, கமல் பங்கேற்பு | நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா | கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது : ஜாய் கிரிசில்டா பதிவு | ‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு |
பஹத் பாஸில் நடித்த அன்னயும் ரசூலும், துல்கர் சல்மான் நடித்த கம்மட்டிப்பாடம் ஆகிய படங்களை இயக்கியவர் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜீவ் ரவி. அதையடுத்து 2018ல் நிவின்பாலி நடிப்பில் துறமுகம் என்கிற படத்தை துவங்கி படப்பிடிப்பையும் ஆரம்பித்தார் ராஜீவ் ரவி. பொதுவாக ராஜீவ் ரவியின் படங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை நடைமுறைகளை சொல்லும் விதமாக அமைந்திருக்கும். அந்தவிதமாக துறைமுகம் பகுதியையும் துறைமுக அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள், அந்தப்பகுதியை சார்ந்த மக்கள் ஆகியோரை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.
ஆனால் இந்த படம் துவங்கப்பட்டு பல்வேறு தடங்கல்களை சந்தித்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது. ஆனால் சில பிரச்சினைகள் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படாமலேயே இருந்தது. படம் துவங்கி 5 வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது ஒருவழியாக வரும் மார்ச் 10ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த வருடம் நிவின்பாலி நடிப்பில் வெளியான படவேட்டு, மகாவீர்யர், சாட்டர்டே நைட் ஆகிய மூன்று படங்களும் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் இந்த வருடம் அவரது முதல் படமாக வெளியாக இருக்கும் இந்த துறமுகம் அவரை சரிவிலிருந்து மீட்கும் என நம்பலாம்.