‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பஹத் பாஸில் நடித்த அன்னயும் ரசூலும், துல்கர் சல்மான் நடித்த கம்மட்டிப்பாடம் ஆகிய படங்களை இயக்கியவர் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜீவ் ரவி. அதையடுத்து 2018ல் நிவின்பாலி நடிப்பில் துறமுகம் என்கிற படத்தை துவங்கி படப்பிடிப்பையும் ஆரம்பித்தார் ராஜீவ் ரவி. பொதுவாக ராஜீவ் ரவியின் படங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை நடைமுறைகளை சொல்லும் விதமாக அமைந்திருக்கும். அந்தவிதமாக துறைமுகம் பகுதியையும் துறைமுக அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள், அந்தப்பகுதியை சார்ந்த மக்கள் ஆகியோரை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.
ஆனால் இந்த படம் துவங்கப்பட்டு பல்வேறு தடங்கல்களை சந்தித்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது. ஆனால் சில பிரச்சினைகள் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படாமலேயே இருந்தது. படம் துவங்கி 5 வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது ஒருவழியாக வரும் மார்ச் 10ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த வருடம் நிவின்பாலி நடிப்பில் வெளியான படவேட்டு, மகாவீர்யர், சாட்டர்டே நைட் ஆகிய மூன்று படங்களும் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் இந்த வருடம் அவரது முதல் படமாக வெளியாக இருக்கும் இந்த துறமுகம் அவரை சரிவிலிருந்து மீட்கும் என நம்பலாம்.