முக்கிய நிபந்தனையுடன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்பும் கிச்சா சுதீப் | '2018' பட இயக்குனரின் டைரக்ஷனில் கதாநாயகியாக அறிமுகமாகும் மோகன்லாலின் மகள் | தான் படித்த கல்லூரியின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற மம்முட்டியின் வாழ்க்கை வரலாறு | மத்திய அமைச்சருக்கே இந்த நிலை என்றால் ? சுரேஷ்கோபி பட சென்சார் சர்ச்சை குறித்து மாநில அமைச்சர் காட்டம் | மீண்டும் துடிப்புடன் படப்பிடிப்புக்கு தயாரான மம்முட்டி | ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி |
கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் 'துறமுகம்' என்கிற படம் வெளியானது. இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளரும் கம்மட்டிப்பாடம் உள்ளிட்ட படங்களை இயக்கி பல விருதுகளை வென்ற இயக்குனருமான ராஜீவ் ரவி என்பவர் இயக்கியிருந்தார். மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் மிகவும் தாமதமாக வெளியாகி தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜோஸ் தாமஸ் என்பவர் பண மோசடி செய்தது தொடர்பாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த படத்தை தயாரிப்பதற்காக இவர் சில போலியான ஆவணங்களை வழங்கி சுமார் 8 கோடியே 40 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக கில்பர்ட் என்பவர் புகார் அளித்திருந்தார். இதையடுத்து ஜோஸ் தாமஸ் அவரது இல்லத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். துறமுகம் படம் தோல்வி அடைந்ததாலும் சரியான சமயத்தில் வெளிவராமல் தயாரிப்பிலேயே நீண்ட தாமதத்தை ஏற்படுத்தியதாலும் ஜோஸ் தாமஸுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு அதை சரியாக திருப்பி செலுத்த இயலாத சூழலில் தான் அவர் இவ்வாறு மோசடி செய்து பணம் பெற்றது தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.