இரண்டு தயாரிப்பாளர்களால் கமல்ஹாசனுக்கு நெருக்கடி | நான் பணம் கேட்டேனா... ஏமாந்துராதீங்க... : எச்சரிக்கும் சிங்கம் புலி | 19ம் நூற்றாண்டு கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா | சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கியது | திருமுருகன் கொடுத்த சர்ப்ரைஸ் : பாண்டி கமல் நெகிழ்ச்சி | தலைமை செயலகத்தில் நுழைவதற்காக முற்றிலும் புதிதாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | மாரி 2 படத்துக்கு பின் தமிழில் நடிக்காதது ஏன் ? - டொவினோ தாமஸ் விளக்கம் | பிரபாஸ் ஒதுக்கிய வாய்ப்பால் கிடுகிடு வளர்ச்சி அடைந்த அல்லு அர்ஜுன் | 'ராமாயணா' படத்திற்கு புதிய சர்ச்சை |
மலையாளத்தில் நடிகர் மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மயுகம் படம் இன்று பிப்ரவரி 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. கடந்த வருடங்களை கணக்கிட்டு பார்த்தால் நடிகர் மம்முட்டி மிக துணிச்சலான முடிவுகளை எடுத்து பல வித்தியாசமான கதைகளிலும் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த வருடம் இறுதியில் வெளியான காதல் : தி கோர் என்கிற படத்தில் கூட ஓரினச்சேர்க்கையாளராக நடித்து ஆச்சரியம் அளித்தார். இந்த பிரம்மயுகம் படத்தில் 70 வயதிற்கு மேலான ஒரு கிராமத்து பெரியவர் கதாபாத்திரத்தில் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார் மம்முட்டி.
ராகுல் சதாசிவன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய மம்முட்டி, “பிரம்மயுகம் படத்தில் ஹீரோ, வில்லன் என யாரும் இல்லை. எல்லாமே கதாபாத்திரங்கள் தான். அவர்களின் குணாதிசயங்கள் தான் ரசிகர்களின் பார்வையில் யார் ஹீரோ, யார் வில்லன் என்பதை தீர்மானிக்கும். இந்த படம் குறித்து எந்தவித முன் எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த படம் இப்படித்தான் நகரும் என்கிற யூகங்கள் எதுவும் இல்லாமல் படம் பார்க்க அமர்ந்தால் நிச்சயமாக ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.