நான் பணம் கேட்டேனா... ஏமாந்துராதீங்க... : எச்சரிக்கும் சிங்கம் புலி | 19ம் நூற்றாண்டு கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா | சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கியது | திருமுருகன் கொடுத்த சர்ப்ரைஸ் : பாண்டி கமல் நெகிழ்ச்சி | தலைமை செயலகத்தில் நுழைவதற்காக முற்றிலும் புதிதாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | மாரி 2 படத்துக்கு பின் தமிழில் நடிக்காதது ஏன் ? - டொவினோ தாமஸ் விளக்கம் | பிரபாஸ் ஒதுக்கிய வாய்ப்பால் கிடுகிடு வளர்ச்சி அடைந்த அல்லு அர்ஜுன் | 'ராமாயணா' படத்திற்கு புதிய சர்ச்சை | 2024ன் முதல் வசூல் படமாக 'அரண்மனை 4' |
கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் 'துறமுகம்' என்கிற படம் வெளியானது. இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளரும் கம்மட்டிப்பாடம் உள்ளிட்ட படங்களை இயக்கி பல விருதுகளை வென்ற இயக்குனருமான ராஜீவ் ரவி என்பவர் இயக்கியிருந்தார். மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் மிகவும் தாமதமாக வெளியாகி தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜோஸ் தாமஸ் என்பவர் பண மோசடி செய்தது தொடர்பாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த படத்தை தயாரிப்பதற்காக இவர் சில போலியான ஆவணங்களை வழங்கி சுமார் 8 கோடியே 40 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக கில்பர்ட் என்பவர் புகார் அளித்திருந்தார். இதையடுத்து ஜோஸ் தாமஸ் அவரது இல்லத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். துறமுகம் படம் தோல்வி அடைந்ததாலும் சரியான சமயத்தில் வெளிவராமல் தயாரிப்பிலேயே நீண்ட தாமதத்தை ஏற்படுத்தியதாலும் ஜோஸ் தாமஸுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு அதை சரியாக திருப்பி செலுத்த இயலாத சூழலில் தான் அவர் இவ்வாறு மோசடி செய்து பணம் பெற்றது தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.