இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் 'துறமுகம்' என்கிற படம் வெளியானது. இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளரும் கம்மட்டிப்பாடம் உள்ளிட்ட படங்களை இயக்கி பல விருதுகளை வென்ற இயக்குனருமான ராஜீவ் ரவி என்பவர் இயக்கியிருந்தார். மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் மிகவும் தாமதமாக வெளியாகி தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜோஸ் தாமஸ் என்பவர் பண மோசடி செய்தது தொடர்பாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த படத்தை தயாரிப்பதற்காக இவர் சில போலியான ஆவணங்களை வழங்கி சுமார் 8 கோடியே 40 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக கில்பர்ட் என்பவர் புகார் அளித்திருந்தார். இதையடுத்து ஜோஸ் தாமஸ் அவரது இல்லத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். துறமுகம் படம் தோல்வி அடைந்ததாலும் சரியான சமயத்தில் வெளிவராமல் தயாரிப்பிலேயே நீண்ட தாமதத்தை ஏற்படுத்தியதாலும் ஜோஸ் தாமஸுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு அதை சரியாக திருப்பி செலுத்த இயலாத சூழலில் தான் அவர் இவ்வாறு மோசடி செய்து பணம் பெற்றது தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.