48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி | சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு |
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி அதன்பிறகு நடிகர், தயாரிப்பாளர், எடிட்டர், இயக்குனர் என பன்முகம் காட்டி வருகிறார். மார்கன் படத்திற்குப் பிறகு விஜய் ஆண்டனியின் 25வது படமான சக்தி திருமகன் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தனது காலில் செருப்பு அணியாமல் இருப்பது குறித்து அவர் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், காலில் செருப்பு அணியாமல் நடக்கும் போது மனதுக்கு நிறைவாக உள்ளது. முக்கியமாக இந்த பூமிக்கும் நமக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு சினிமா பிரபலம் என்பதால் விமானத்தில் பயணிப்பது, ஏசி காற்றில் உறங்குவது, பங்களா வீடு போன்ற ஆடம்பரங்கள் நம்மை சுற்றி இருக்கின்றன. நாமே நினைத்தாலும் அதை எல்லாம் விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில்தான் என் காலில் செருப்பே அணியாமல் நடந்து செல்கிறேன். இதன் மூலம் மனசுக்கு நிறைவாக இருப்பது மட்டுமின்றி என்னை நானே பக்குவப்படுத்திக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகர் விஜய் ஆண்டனி.