சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் ஞானவேல்ராஜா. சென்னை, தி.நகரில் இவர் வசித்து வருகிறார். சமீபத்தில் இவரது மனைவி நேகாவின் தங்க நகைகள் மாயமாகி உள்ளது. இதுதொடர்பாக இவரது வீட்டு பணிப்பெண் லட்சுமி என்பவர் மீது சந்தேகம் வர அவர் மீது மாம்பலம் போலீசில் புகார் அளித்தார் ஞானவேல்ராஜா. இதையடுத்து லட்சுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விவகாரத்தால் மன உளைச்சலில் இருந்த லட்சுமி அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில், நகையை தொலைத்துவிட்டு தன் தாய் மீது பழி போடுவதாகவும், அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாகவும் கூறி ஞானவேல் மீது லட்சுமியின் மகள் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.