சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'தங்கலான்'. பா.ரஞ்சித் இயக்கி உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க, ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். படம் நாளை ஆக., 15ல் வெளியாகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும், அவருடைய அப்பாவும் வாங்கிய கடன் தொகை பாக்கி காரணமாக 'தங்கலான்' படத்திற்கு ஒரு முட்டுக்கட்டை ஏற்பட்டது.
அதாவது அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்ற பைனான்சியரிடம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சுமார் பத்து கோடி கடன் வாங்கியுள்ளார்கள் ஞானவேல்ராஜா, ஈஸ்வரன். பணத்தை திருப்பி தராததால் இவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. பணத்தை திருப்பி தரச் சொல்லி கோர்ட்டும் உத்தரவிட்டது. ஆனால் அவர்கள் செலுத்தவில்லை. இதனால் அவர்கள் மீது திவாலானவர்கள் என அறிவிக்க வேண்டும் என சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கின் விசாரணையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் 'தங்கலான்' பட வெளியீட்டிற்கு முன்பாக ஒரு கோடி, 'கங்குவா' வெளியீட்டிற்கு முன்பாக ஒரு கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கார்த்திகேயன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டனர். தொடர்ந்து இந்த வழக்கு இன்று (ஆக., 14) மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் ஞானவேல் ராஜா தரப்பில் ரூ.1 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டதாக நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து படத்தை வெளியிட தடையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்மூலம் தங்கலான் வெளியீட்டில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது. நாளை திட்டமிட்டப்படி படம் உலகம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.