என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'தங்கலான்'. பா.ரஞ்சித் இயக்கி உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க, ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். படம் நாளை ஆக., 15ல் வெளியாகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும், அவருடைய அப்பாவும் வாங்கிய கடன் தொகை பாக்கி காரணமாக 'தங்கலான்' படத்திற்கு ஒரு முட்டுக்கட்டை ஏற்பட்டது.
அதாவது அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்ற பைனான்சியரிடம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சுமார் பத்து கோடி கடன் வாங்கியுள்ளார்கள் ஞானவேல்ராஜா, ஈஸ்வரன். பணத்தை திருப்பி தராததால் இவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. பணத்தை திருப்பி தரச் சொல்லி கோர்ட்டும் உத்தரவிட்டது. ஆனால் அவர்கள் செலுத்தவில்லை. இதனால் அவர்கள் மீது திவாலானவர்கள் என அறிவிக்க வேண்டும் என சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கின் விசாரணையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் 'தங்கலான்' பட வெளியீட்டிற்கு முன்பாக ஒரு கோடி, 'கங்குவா' வெளியீட்டிற்கு முன்பாக ஒரு கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கார்த்திகேயன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டனர். தொடர்ந்து இந்த வழக்கு இன்று (ஆக., 14) மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் ஞானவேல் ராஜா தரப்பில் ரூ.1 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டதாக நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து படத்தை வெளியிட தடையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்மூலம் தங்கலான் வெளியீட்டில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது. நாளை திட்டமிட்டப்படி படம் உலகம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.