வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

தமிழக அரசு சார்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகின்றன. அதோடு, பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி, பாலசரசுவதி ஆகியோர் பெயர்களில் அகில இந்திய விருதுகளும் வழங்கப்படுகின்றன. சமீபத்தில் 2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன.
விக்ரம் பிரபு, எஸ்ஜே சூர்யா, சாய் பல்லவி, அனிருத், லிங்குசாமி உள்ளிட்ட பல கலைஞர்கள் இந்த விருதுக்கு தேர்வாகினர். இவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் இன்று(அக்., 11) நடந்தது. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று கலைஞர்களுக்கு விருது வழங்கினார்.
ஜேசுதாஸிற்கு கவுரவம்
பாடகர் கே.ஜே.யேசுதாஸிற்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் வழங்கப்படும் சிறப்பு விருது வழங்கப்பட்டது. யேசுதாஸ் அமெரிக்காவில் இருப்பதால் அவர் சார்பில் அவரது மகன், பாடகர் விஜய் யேசுதாஸ் பெற்றுக் கொண்டார். யேசுதாஸ் காணொளி வாயிலாக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்ததோடு, விருது பெற்ற சக கலைஞர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்த விழாவில் தன்னால் வர முடியாததற்கு வருத்தமும் தெரிவித்தார்.
தொடர்ந்து விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, அனிருத், சாய் பல்லவி, லிங்குசாமி, சூப்பர் சுப்பராயன், விவேகா, மணிகண்டன், ஜார்ஜ் மரியான், சாண்டி, கமலேஷ், ‛மெட்லி ஒலி' காயத்ரி, விக்ரமன் மனைவி, நடன கலைஞர் ஜெயப்பிரியா உள்ளிட்ட கலைஞர்களும் முதல்வர் ஸ்டாலின் கையால் கலைமாமணி விருது பெற்றனர். பாடகி ஸ்வேதா மோகனுக்கு பதில் அவரது அம்மா பாடகி, சுஜாதா விருதை பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் சாமிநாதன், சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




