கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
தமிழில் டிமான்டி காலனி என்கிற வித்தியாசமான ஹாரர் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து. அதனைத் தொடர்ந்து இமைக்கா நொடிகள் மற்றும் கோப்ரா என இரண்டு படங்களை இவர் இயக்கினார். இவற்றில் இமைக்கா நொடிகள் படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. ஆனால் கோப்ரா படம் தோல்வி அடைந்தது..
இந்த நிலையில் தற்போது டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் அஜய் ஞானமுத்து. இந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக கொடுத்த பேட்டியில் விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படம் தோல்வியடைந்தது எதனால் என மனம் திறந்து உள்ளார் அஜய் ஞானமுத்து.
இது பற்றி அவர் கூறும்போது, 'கோப்ரா படத்திற்காக அதன் தயாரிப்பாளரிடம் என்னிடம் இருந்த கதையை கூறினேன். ஆனால் அது தயாரிப்பாளரை கவரவில்லை. வேறு ஒரு கதாசிரியரிடம் இருந்து அவரது கதையை வாங்கி மெருகேற்றி சென்று கூறினேன். அதுவும் அவருக்கு பிடிக்கவில்லை. பின்னர் அவரே எனக்கு வேறு ஒரு ஸ்கிரிப்ட் கொடுத்து இதை பண்ணுங்கள் என்று கூறினார். எனக்கு அந்த கதையில் பெரிய உடன்பாடு இல்லாவிட்டாலும் இதிலேயே எட்டு மாதங்கள் கடந்து விட்டதால் அந்த கதையில் காட்சிகளில், திரைக்கதையில் பல மாற்றங்களை செய்து உருவாக்கினோம். ஆனாலும் மையக்கதை என்பது பலவீனமாக இருந்ததால் அந்த படத்தை காப்பாற்ற முடியவில்லை., அதிருப்தியுடன் தான் அந்த படத்தை இயக்கினேன், அதன் பிறகு தான் இந்த படத்தை நாம் இயக்கி இருக்கக் கூடாது என்று உணர்ந்தேன்” என்று கூறியுள்ளார்.