என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தெலுங்கு திரையுலகின் பிரபல ஹீரோவான நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யா தற்போது இளம் முன்னணி நடிகராக படங்களில் நடித்து வருகிறார். இவரும் நடிகை சமந்தாவும் ஒன்றாக இணைந்து நடித்த போது காதல் ஏற்பட்டு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ஒரு சில வருடங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்து விவாகரத்தும் பெற்று விட்டனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக நாகசைதன்யாவும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவும் காதலித்து வருவதாக செய்திகள் அடிபட்டு வந்தன. அது உண்மைதான் என்பது போல சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமண தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த ஜோதிடர் வேணு சுவாமி என்பவர் நாகசைதன்யா - சோபிதா துலிபாலா இருவரும் திருமணம் செய்து கொண்டாலும் சில வருடங்களுக்குள் அவர்களுக்கு பிரிவு ஏற்படும் என்றும், அதுவும் ஒரு பெண்ணால் ஏற்படும் என்றும் தானாகவே ஜோதிடம் கணித்து கூறினார். இவரது இந்த பேச்சு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இவர் மீது தெலுங்கு திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் வாயிலாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அது மட்டுமல்ல தெலுங்கு திரையுலக நடிகர் சங்கத்தின் தலைவரான நடிகர் விஷ்ணு மஞ்சு இவரை அழைத்து கண்டித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இன்னொரு வீடியோ வெளியிட்டுள்ள விஷ்ணு சுவாமி, “நான் வேண்டுமென்றே யார் மனதையும் புண்படுத்தும் விதமாக எதையும் கூறவில்லை. ஜோதிட கணிப்பை தான் கூறினேன். இனிமேல் நான் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்து என்னுடைய கணிப்பை பொதுவெளியில் கூறப்போவதில்லை” என்று கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்துள்ளார்.