பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
தெலுங்கு திரையுலகை பொருத்தவரை பிரபல சீனியர் ஹீரோக்களின் வாரிசுகள் மற்றும் அவர்களது குடும்ப வாரிசுகளும் அவ்வப்போது திரையுலகில் கதாநாயகர்களாக அறிமுகமாகி வருகிறார்கள். பலர் தங்களது திறமையால் சாதித்து தங்களுக்கு என ஒரு இடத்தையும் தக்க வைத்து கொண்டு உள்ளார்கள். அந்த வகையில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவின் வாரிசுகள் யாரும் இதுவரை சினிமாவில் இறங்கவில்லையே என பலருக்கும் ஆச்சரியமும் சந்தேகமும் கூட எழுந்திருக்கும். இந்த நிலையில் விரைவில் பாலகிருஷ்ணாவின் மகன் மோக்சக்னா தேஜா கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்திற்கான துவக்க விழா வரும் செப்டம்பர் 6ம் தேதி மோக்சக்னா தேஜாவின் பிறந்தநாளில் நடைபெற இருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஹனுமான் படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மா இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படம் இயக்குனரின் முந்தைய படத்தைப் போல ஒரு சூப்பர் மேன் கதையம்சத்துடன் தான் உருவாக இருக்கிறதாம். முதல் படத்திலேயே சூப்பர் மேன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் பாலகிருஷ்ணாவின் மகன். அது மட்டுமல்ல பாலகிருஷ்ணாவின் மகளான நந்தமூரி தேஜஸ்வினி இந்த படத்தின் இணை தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.