சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
தெலுங்கு திரையுலகை பொருத்தவரை பிரபல சீனியர் ஹீரோக்களின் வாரிசுகள் மற்றும் அவர்களது குடும்ப வாரிசுகளும் அவ்வப்போது திரையுலகில் கதாநாயகர்களாக அறிமுகமாகி வருகிறார்கள். பலர் தங்களது திறமையால் சாதித்து தங்களுக்கு என ஒரு இடத்தையும் தக்க வைத்து கொண்டு உள்ளார்கள். அந்த வகையில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவின் வாரிசுகள் யாரும் இதுவரை சினிமாவில் இறங்கவில்லையே என பலருக்கும் ஆச்சரியமும் சந்தேகமும் கூட எழுந்திருக்கும். இந்த நிலையில் விரைவில் பாலகிருஷ்ணாவின் மகன் மோக்சக்னா தேஜா கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்திற்கான துவக்க விழா வரும் செப்டம்பர் 6ம் தேதி மோக்சக்னா தேஜாவின் பிறந்தநாளில் நடைபெற இருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஹனுமான் படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மா இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படம் இயக்குனரின் முந்தைய படத்தைப் போல ஒரு சூப்பர் மேன் கதையம்சத்துடன் தான் உருவாக இருக்கிறதாம். முதல் படத்திலேயே சூப்பர் மேன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் பாலகிருஷ்ணாவின் மகன். அது மட்டுமல்ல பாலகிருஷ்ணாவின் மகளான நந்தமூரி தேஜஸ்வினி இந்த படத்தின் இணை தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.