பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. ஏப்ரல் 9ம் தேதி பிக்பாஸ் அல்டிமேட்டின் இறுதி போட்டி நடைபெற்று, அதன் ஒளிபரப்பு ஏப்ரல் 10ம் தேதி நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த வாரத்திற்கான எவிக்சன் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் தாமரையை ஹவுஸ்மேட்கள் டார்கெட் செய்து வருகின்றனர். 'நானாக நானிருந்தேன்' என்ற டாஸ்க்கின் போது ரம்யா பாண்டியனும், அபிராமியும் 'தாமரைக்கு தனித்துவமும் இல்லை, நேர்மையும் இல்லை அவர் நடிக்கிறார்' என அவரது குறையை சுட்டிக்காட்டி பேசுகின்றனர். இதனால் மூன்று பேருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெறுகிறது. அதில் முதல் சுற்றில் தாமரை வெளியேற்றப்படுவதால் அவர் கண்கலங்குகிறார். மேலும், வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், நிரூப், அபிராமி, ரம்யா ஆகிய மூவரும் விளையாடுகின்றனர். அதில் நிரூப், அபிராமி பாலாவின் பின்னாடியே செல்வதாக சொல்கிறார். இதனால் மனமுடைந்த அபிராமி கதறி அழுகிறார்.
இது ஒருபுறமிருக்க இதுவரை பதிவான வாக்குகள் அடிப்படையில் அபிராமி அல்லது ரம்யா இந்த வாரம் எவிக்சன் ஆகலாம் என கூறப்படுகிறது. அதேசமயம் ஹவுஸ்மேட்கள் தாமரையை டார்கெட் செய்து வெளியேற்றுவதில் குறியாக உள்ளனர் என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.