நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
கோயில் திருவிழாக்களில் வேஷம் கட்டி ஆடும் தெருக்கூத்து கலைஞரான தாமரைச் செல்விக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி புதியதொரு முகத்தை கொடுத்தது. பிக்பாஸ் சீசன் 5 மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதிரடியாக அசத்திய தாமரைக்கு மக்களின் சப்போர்ட்டும் நிறையவே கிடைத்தது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த அவர் குணச்சித்திர நடிகையாக சினிமா மற்றும் சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார். தனது குடும்ப வறுமை காரணமாக தெருக்கூத்து கலைஞராக பல கஷ்டங்களை சந்தித்த தாமரை தற்போது கைநிறைய சம்பாதித்து தன் குடும்பத்தாரை மகிழ்ச்சியாக வைத்துள்ளார்.
இந்நிலையில், அவர் தனது சொந்த ஊரான புதுக்கோட்டை ஏ.மாத்தூரில் புதிதாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்வு இன்று (செப்டம்பர் 17) நடைபெறுகிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொண்ட தாமரை, வரவேற்பு பத்திரிகையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து தாமரையின் வளர்ச்சியை பாராட்டியும் அவர் மேன்மேலும் வளரவும் ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.