பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கடந்த வருடம் ஆரம்பித்த கொரோனா தாக்கம் இரண்டாவது அலையாக மாறி இந்த வருடம் வரை நீடித்ததால், பெரிய நடிகர்களின் படங்கள் திட்டமிட்டபடி படபிடிப்பை நடத்த முடியவில்லை. அதனால் எதிர்பாத்த தேதியில் ரிலீஸ் செய்யவும் முடியவில்லை. அந்த வகையில் தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது நடித்து வரும் புஷ்பா என்கிற படத்தின் முதல் பாகத்தை இந்த வருடம் கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியிடுகிறார்கள். அதே சமயம் அடுத்த வருடம் தனது இரண்டு படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் அல்லு அர்ஜுன்.
அந்த வகையில் இயக்குனர் வேணு ஸ்ரீராம் என்பவர் அல்லு அர்ஜுன் படத்தை இயக்க தயாராக இருக்கிறார். அதே சமயம் தற்போது பாலகிருஷ்ணாவை வைத்து அகண்டா என்கிற படத்தை இயக்கி வரும் போயப்பட்டி ஸ்ரீனு டைரக்ஷனிலும் நடிக்க இருக்கிறார் அல்லு அர்ஜுன். அந்த வகையில் அடுத்த வருடம் ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் மாறி மாறி நடிக்க திட்டமிட்டுள்ளார் அல்லு அர்ஜுன்.