மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

கடந்த வருடம் ஆரம்பித்த கொரோனா தாக்கம் இரண்டாவது அலையாக மாறி இந்த வருடம் வரை நீடித்ததால், பெரிய நடிகர்களின் படங்கள் திட்டமிட்டபடி படபிடிப்பை நடத்த முடியவில்லை. அதனால் எதிர்பாத்த தேதியில் ரிலீஸ் செய்யவும் முடியவில்லை. அந்த வகையில் தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது நடித்து வரும் புஷ்பா என்கிற படத்தின் முதல் பாகத்தை இந்த வருடம் கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியிடுகிறார்கள். அதே சமயம் அடுத்த வருடம் தனது இரண்டு படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் அல்லு அர்ஜுன்.
அந்த வகையில் இயக்குனர் வேணு ஸ்ரீராம் என்பவர் அல்லு அர்ஜுன் படத்தை இயக்க தயாராக இருக்கிறார். அதே சமயம் தற்போது பாலகிருஷ்ணாவை வைத்து அகண்டா என்கிற படத்தை இயக்கி வரும் போயப்பட்டி ஸ்ரீனு டைரக்ஷனிலும் நடிக்க இருக்கிறார் அல்லு அர்ஜுன். அந்த வகையில் அடுத்த வருடம் ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் மாறி மாறி நடிக்க திட்டமிட்டுள்ளார் அல்லு அர்ஜுன்.




