ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
இயல்பான நடிகை எனப் பெயரெடுத்தவர் தமிழ் நடிகையான சாய் பல்லவி. தமிழ் சினிமாவை இவரை இன்னும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், தெலுங்கில் இவருக்கு சவாலான கதாபாத்திரங்கள் கிடைத்து அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
நீலகிரியைச் சொந்த ஊராகக் கொண்ட சாய்பல்லவி அவருடைய தாத்தாவின் 85வது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். “வேர்கள், தாத்தாவின் 85வது,” எனக் குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் தாத்தா, பாட்டி, தங்கை ஆகியோரது புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.
தாத்தாவின் 85வது பிறந்தநாளைக் கொண்டாடிய சாய்பல்லவிக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். அவரது பதிவை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளார்கள்.
நெற்றியில் திருநீறு, தலையில் முல்லைப்பூவுடன், புடவையில் நமது பக்கத்து வீட்டுப் பெண் போல தோற்றமளிக்கும் சாய் பல்லவியைப் பார்க்கும் போது 'ரவுடி பேபி' பாடலில் அப்படி ஆடியவரா இவர் என ஆச்சரியப்பட வைக்கிறார்.
விரைவில் தமிழ்ப் படம் ஒன்றில் முதன்மைக் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்படம் அவருக்குத் திருப்புமுனையாக அமையட்டும்.