துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு |
இயல்பான நடிகை எனப் பெயரெடுத்தவர் தமிழ் நடிகையான சாய் பல்லவி. தமிழ் சினிமாவை இவரை இன்னும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், தெலுங்கில் இவருக்கு சவாலான கதாபாத்திரங்கள் கிடைத்து அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
நீலகிரியைச் சொந்த ஊராகக் கொண்ட சாய்பல்லவி அவருடைய தாத்தாவின் 85வது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். “வேர்கள், தாத்தாவின் 85வது,” எனக் குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் தாத்தா, பாட்டி, தங்கை ஆகியோரது புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.
தாத்தாவின் 85வது பிறந்தநாளைக் கொண்டாடிய சாய்பல்லவிக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். அவரது பதிவை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளார்கள்.
நெற்றியில் திருநீறு, தலையில் முல்லைப்பூவுடன், புடவையில் நமது பக்கத்து வீட்டுப் பெண் போல தோற்றமளிக்கும் சாய் பல்லவியைப் பார்க்கும் போது 'ரவுடி பேபி' பாடலில் அப்படி ஆடியவரா இவர் என ஆச்சரியப்பட வைக்கிறார்.
விரைவில் தமிழ்ப் படம் ஒன்றில் முதன்மைக் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்படம் அவருக்குத் திருப்புமுனையாக அமையட்டும்.