Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாழ்நாள் முழுக்க குற்ற உணர்ச்சி : பலியான தோழியிடம் மன்னிப்பு கேட்டு யாஷிகா உருக்கமான பதிவு

03 ஆக, 2021 - 12:15 IST
எழுத்தின் அளவு:
I-will-forever-feel-Guilty-to-be-alive-says-Yashika

இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி படங்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் கடந்த 24ந்தேதி நள்ளிரவு தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டிய யாஷிகாவுக்கு கை, கால், முதுகு எலும்புகள் முறிந்த நிலையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

விபத்துக்கு பின்னர் முதன்முறையாக யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தன்னுடைய புகைப்படத்தை நீக்கியுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது : ‛‛நான் இப்போது என்ன நிலையில் இருக்கிறேன் என்பதை விவரிக்க முடியவில்லை. நான் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியுடன் இருப்பேன். இப்படி ஒரு மிகப் பெரிய விபத்திலிருந்து இப்படி காப்பாற்றியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதா இல்லை என்னுடைய நெருங்கிய தோழியை என்னிடமிருந்து பிரித்துக் கொண்டதற்காக கடவுளை பழிப்பதா என்பது தெரியவில்லை.

ஒவ்வொரு நொடியும் நான் பவணியை மிஸ் செய்வேன். நீ என்னை மன்னிக்க மாட்டாய் என்பது தெரியும். என்னை மன்னித்துவிடு. உன்னுடைய குடும்பத்தை இப்படி ஒரு நிலைக்கு ஆளாகி விட்டேன். ஆனால், உன்னை ஒவ்வொரு நொடியும் மிஸ் செய்வேன். வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியோடு தான் இருப்பேன். உன்னுடைய ஆத்மா சாந்தி அடையட்டும். நீ என்னிடம் திரும்பி விடுவாய் என்று தான் பிரார்த்தனை செய்கிறேன். ஒருநாள் உன்னுடைய குடும்பத்தினர் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன். என்றும் உன்னுடைய நினைவுகளை நினைத்து பூரிப்படைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

நாளை யாஷிகாவின் பிறந்தநாள். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் நான் என்னுடைய பிறந்த நாளை கொண்டாடப் போவதில்லை. என்னுடைய ரசிகர்களும் என் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். பவணியின் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள். கடவுள் தான் அவர்களுக்கு பலத்தை கொடுக்க வேண்டும். என் வாழ்வில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பு. என்றாவது ஒரு நாள் என்னை மன்னித்துவிடு என்று பதிவிட்டிருக்கிறார். யாஷிகாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலர் யாஷிகாவிற்கு ஆறுதல் சொன்னாலும் பெரும்பாலானோர் யாஷிகாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
தாத்தாவின் 85வது பிறந்தநாளைக் கொண்டாடிய சாய் பல்லவிதாத்தாவின் 85வது பிறந்தநாளைக் ... மாளவிகா மோகனனின் கவர்ச்சி படம் வைரல் மாளவிகா மோகனனின் கவர்ச்சி படம் வைரல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Bhaskaran - Chennai,இந்தியா
05 ஆக, 2021 - 16:44 Report Abuse
Bhaskaran தண்டனையில் இருந்து தப்பிக்க மக்களிடம் இடம் அனுதாபங்கள் தேடும் முயற்சி
Rate this:
raja - Cotonou,பெனின்
04 ஆக, 2021 - 15:34 Report Abuse
raja குடி, கூத்து, கும்மாளம், அது ஆனாங்க இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி..... ஆண்டவனே வந்தாலும் காப்பாத்த முடியாது.....
Rate this:
மணி - புதுகை,இந்தியா
04 ஆக, 2021 - 06:10 Report Abuse
மணி இதெல்லாம் மறந்துட்டு இன்னும் நாலு நாள்ல குடித்து கும்மாளம் போட வேகமா கார கெளப்பிகிட்டு கெளம்பிடுவ.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
04 ஆக, 2021 - 04:56 Report Abuse
meenakshisundaram இந்த வயசில காடு வெளி சித்தர் பாட்டை இவள் மாதிரி பொண்ணுங்க ரசிக்க மாட்டாங்க .இழந்தவர்களுக்கே அதன் பொருள் விளங்கும்.
Rate this:
03 ஆக, 2021 - 15:56 Report Abuse
saravanan Rajan குடி தன் குடியை மட்டும் இல்லை, மற்றவர் குடியையும் கெடுக்கும்..
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in