டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

கடந்த 2021ம் ஆண்டு நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான யாஷிகா ஆனந்த், மாமல்லபுரம் அருகே கார் ஓட்டி சென்றபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் நெருங்கிய தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் அவரது இரண்டு நண்பர்களும் படுகாயம் அடைந்தார்கள். அதையடுத்து சில மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில் அந்த கார் விபத்து குறித்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா விபத்து குறித்து விசாரணை நடைபெற்ற போது அதுகுறித்த விளக்கங்களை அளித்திருக்கிறார்.