சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
கடந்த 2021ம் ஆண்டு நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான யாஷிகா ஆனந்த், மாமல்லபுரம் அருகே கார் ஓட்டி சென்றபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் நெருங்கிய தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் அவரது இரண்டு நண்பர்களும் படுகாயம் அடைந்தார்கள். அதையடுத்து சில மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில் அந்த கார் விபத்து குறித்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா விபத்து குறித்து விசாரணை நடைபெற்ற போது அதுகுறித்த விளக்கங்களை அளித்திருக்கிறார்.