ஜனநாயகன் பட விவகாரம் : விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் | அருண் விஜய், முத்தையா கூட்டணியில் புதிய படம் | சிரஞ்சீவி படத்தின் முதல் நாள் வசூல் 84 கோடி | நான் நிறைய கதைகள் எழுதி வருகிறேன் : நடிகர் சூரி | சிரஞ்சீவி படத்தின் ரேட்டிங்கிற்கு தடை : விஜய் தேவரகொண்டாவின் வருத்தமும், சந்தோஷமும் | 'சர்வம் மாயா' வெற்றியால் தூசு தட்டப்படும் நிவின்பாலியின் பேபி கேர்ள்' | டைகர் ஆப் மார்சியல் ஆர்ட்ஸ் பட்டம் வென்ற பவன் கல்யாண் | ராம்சரண் படத்தால் இயக்குனர் சுகுமாருக்கு ஹார்ட் அட்டாக் வரப்போகிறது : ராஜமவுலி ஆருடம் | ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று நீக்கப்பட்ட சில காட்சிகள் ராஜா சாப் படத்தில் சேர்ப்பு | காசிக்கு போனேன் கரு கிடைத்தது : மோகன் ஜி |

கடந்த 2021ம் ஆண்டு நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான யாஷிகா ஆனந்த், மாமல்லபுரம் அருகே கார் ஓட்டி சென்றபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் நெருங்கிய தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் அவரது இரண்டு நண்பர்களும் படுகாயம் அடைந்தார்கள். அதையடுத்து சில மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில் அந்த கார் விபத்து குறித்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா விபத்து குறித்து விசாரணை நடைபெற்ற போது அதுகுறித்த விளக்கங்களை அளித்திருக்கிறார்.