கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
கமல்ஹாசன் - மணிரத்னம் மீண்டும் இணைந்திருக்கும் தக்லைப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ராஜஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதியில் நடைபெற்று வந்தது. அங்கு சிம்பு நடித்த பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை முதல் தக் லைப் படத்தின் படப்பிடிப்பு 20 நாட்களுக்கு டில்லியில் நடைபெற இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று விட்டதால் ஓரிரு மாதங்கள் தக்லைப் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாத கமல், இந்த படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்ளப் போகிறார். அந்த வகையில், டில்லியில் கமல், சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாகிறது. இங்கு படப்பிடிப்பு நடந்து முடிந்த பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் பங்கேற்று நடிக்க இருப்பதாகவும் படகுழு வட்டாரங்களில் கூறுகிறார்கள்.