'இட்லி கடை' படத்தின் நீளம் குறித்து தகவல் இதோ! | என் அம்மா அளவுக்கு என்னால் சினிமாவில் சாதிக்க முடியாது : ஜான்வி கபூர் | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு தொடங்கியது! | தேசிய விருது : தன் சாதனையை முறியடித்த குட்டி தேவதைக்கு கமல் வாழ்த்து | பிளாஷ்பேக்: சாதனைத் திரைத் தாரகைகள் சரிதா, ஷோபாவை தமிழுக்கு அறிமுகப்படுத்திய கே பாலசந்தர் | பாடல்களில் ஆடியே பிரபலமானேன் என்கிறார் தமன்னா | விரைவில் மறுமணம் செய்யப் போகிறாரா சமந்தா | இவர்கள் தான் எனது ரோல் மாடல் என்கிறார் சாந்தனு | நாளை ஓடிடியில் வெளியாகும் அனுஷ்காவின் காட்டி | கதை நாயகியாக "யாஷிகா ஆனந்த்" நடிக்கும் “டாஸ்” |
சகு பாண்டியன் இயக்கத்தில் ரத்தன் மவுலி, யாஷிகா ஆனந்த், விஜய் டிவி புகழ் யோகி, தேஜா ஸ்ரீ, சஞ்சய் ஷங்கர் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் 'டாஸ்'. கவர்ச்சி நடிகையாக, ஒரு பாட்டுக்கு ஆடுபவராக, இரண்டாவது ஹீரோயினாக நடித்து வந்த யாஷிகா இந்த படத்தில் கதை நாயகியாக நடிக்கிறார்.
படம் குறித்து இயக்குனர் கூறுகையில் ''மர்மமான முறையில் மூன்று கொலைகள் நிகழ்கின்றன. அந்த கொலைகளின் பின்னணி என்ன? யாஷிகா ஆனந்துக்கும், கொலைகளுக்கும் என்ன தொடர்பு என்பதை சொல்லும் கிரைம் திரில்லர் படம் டாஸ். யாஷிகாவுடன், தெலுங்கு திரையுலகில் இருந்து வந்திருக்கும் தேஜாஸ்ரீ இன்னொரு நாயகியாக நடிக்கிறார். கோவில்பட்டி, விருதுநகர், சாத்தூர் பகுதிகளில் ஒரே கட்டமாக 25 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படம் ரிலீஸ்'' என்கிறார்.
ஒரு கட்டத்தில் பல படங்களில் நடித்து வந்த யாஷிகாவுக்கு மாமல்லபுரத்தில் நடந்த விபத்து, தோழி உயிரிழப்பு காரணமாக மார்க்கெட் டல் ஆனது குறிப்பிடத்தக்கது.