தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? | மாதம் 4 லட்சம் ரூபாய் இலவச சாப்பாடு தரும் நான் அரிசியில் மோசடி செய்வேனா : சந்தீப் கிஷன் விரக்தி | வீட்டு சாப்பாடு, மெத்தை கேட்ட தர்ஷனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் | கல்லூரிக்கு கவர்ச்சி ஆடையில் வந்ததாக சர்ச்சை : ஆபாசம் என் உடையில் இல்லை என்கிறார் அமலாபால் |
மலையாள ‛பிரேமம்' படம் மூலம் பிரபலமான நடிகை சாய் பல்லவி, தமிழில் மாரி 2, என்ஜிகே, கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்தார். மலையாளம், தமிழை விட தெலுங்கில் தான் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். அடுத்து பாலிவுட்டிலும் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். ராணுவம் தொடர்பான கதையில் இந்த படம் தயாராகிறது. இதுதவிர தெலுங்கிலும் சில படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உடன் சாய் பல்லவி மாலையும், கழுத்தமாக இருக்கும் போட்டோ ஒன்றை சிலர் வெளியிட்டு இவர்கள் திருமணம் செய்துவிட்டதாக செய்தி பரப்பினர். உண்மையில் அந்த போட்டோ ‛சிவகார்த்திகேயன் 21' பட பூஜையின் போது எடுக்கப்பட்டது. அதை சிலர் இப்படி திரித்து செய்தியாக பரப்ப டென்ஷன் ஆகிவிட்டார் சாய்பல்லவி.
இதுபற்றி சாய்பல்லவி வெளியிட்ட கோபமான பதிவு : ‛‛உண்மையாகவே என்னைப் பற்றி பரவும் வதந்திகளை நான் கண்டு கொள்வது கிடையாது. ஆனால் குடும்பம் போன்று இருக்கும் நண்பர்களை பற்றி வதந்தி பரப்பும் போது அதை பேச வேண்டி உள்ளது. என் சினிமா படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட போட்டோவை வேண்டுமென்றே இதுபோன்று கிராப் செய்து பணத்திற்காக இப்படி ஒரு கேவலமான நோக்கத்தோடு பரப்பி வருகின்றனர். எனது வேலை தொடர்பான மகிழ்ச்சியான அறிவிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும்போது இது போன்ற அர்த்தமற்ற செயல்களுக்கு விளக்கமளிப்பது வேதனையாக உள்ளது'' என பதிவிட்டுள்ளார்.