கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
மலையாளத்தில் வெளியான பிரேமம் என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய்பல்லவி. அந்த ஒரே படத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமான இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கில் அதிக அளவு படங்களில் நடித்துள்ள சாய் பல்லவிக்கு அங்கே மிகப்பெரிய ரசிகர் வட்டமே இருக்கிறது. இந்த நிலையில் இவரது அழகாலும் நடனத்தாலும் இவர் மீது மிகப்பெரிய அளவில் ஈர்ப்பில் இருக்கிறார் பாலிவுட் நடிகரான குல்ஷன் தேவய்யா என்பவர்.
கடந்த 13 ஆண்டுகளாக ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ள குல்ஷன் தேவய்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சாய்பல்லவி பற்றி பேசும்போது, “சாய்பல்லவி மீது எனக்கு நீண்ட நாட்களாகவே மிகப்பெரிய அளவில் கிரஷ் இருக்கிறது. அவரது தொலைபேசி எண் கூட என்னிடம் இருக்கிறது. ஆனால் அவரை அணுகுவதற்கு என்னிடம் துணிச்சல் இல்லை. அவர் ஒரு அற்புதமான நடிகை மற்றும் டான்சர். இது வெறும் கிரஷ் மட்டும் என்றே நான் நினைக்கிறேன். அதைத்தாண்டி எதுவும் இல்லை. ஆனாலும் சில நேரங்களில் அவர் மீது அதிக அளவில் ஈர்க்கப்பட்டு விடுகிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறியுள்ளார்.
நடிகர் குல்ஷன் தேவய்யா ஏற்கனவே திருமணமாகி 8 வருட மண வாழ்க்கைக்கு பிறகு கடந்த 2020ல் தனது மனைவியை பிரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.