பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து | ‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் |
பயங்கரவாதிகளுடனான தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் 'அமரன்'. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். நாளை மறுநாள் அக்டோபர் 31ம் தேதி தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இதையடுத்து படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது சாய்பல்லவியின் பழைய வீடியோவை நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து, படத்திற்கு நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். சாய்பல்லவி சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு பட புரமோஷனுக்காக நடந்த நேர்காணல் நிகழ்ச்சியின்போது பேசுகையில், ''காஷ்மீர் பைல்ஸ் என்ற படத்தை பார்த்தேன். அதில் ஹிந்துக்கள் கொல்லப்பட்டதை காட்டினார்கள். அதேபோல் நாட்டில் மாடு வைத்திருந்த இஸ்லாமியரை ஜெய் ஸ்ரீ ராம் எனக் கூறி சிலர் தாக்கி கொள்கின்றனர். இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மதப்பற்றை வைத்து இன்னொருவரை துன்புறுத்தக் கூடாது அப்படித்தான் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் ஆக பார்க்கின்றனர். இருதரப்புக்கும் இடையே இருக்கும் பார்வைகள் வேறுபடும். வன்முறை என்பது எதற்கும் தீர்வாகாது. நாம் மனிதர்களாக இருக்க வேண்டும்; யாரையும் துன்புறுத்தக் கூடாது'' எனப் பேசியிருந்தார்.
இந்த விவகாரம் அப்போது பூதாகரமாக வெடித்தது. இதற்கு அப்போது பதிலளித்த சாய்பல்லவி, ''நான் சொன்ன கருத்து வேறு மாதிரி புரிந்து கொள்ளப்பட்டது'' என குறிப்பிட்டு இருந்தார். இந்த வீடியோவை தற்போது திடீரென பகிர்ந்துவரும் நெட்டிசன்கள், சாய்பல்லவியை நிராகரிக்க வேண்டும், அமரன் படத்தை நிராகரிக்க வேண்டும் என டிரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் எக்ஸ் பக்கத்தில், #BoycottSaiPallavi என்ற ஹேஸ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.
சாய்பல்லவியின் கருத்தை சரியாக புரிந்து கொள்ளாமல், இப்போது திடீரென பழைய வீடியோவை பரப்பி எதிர்ப்பு தெரிவிப்பது சரியில்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அமரன் பட ரிலீசுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தற்போது இந்த விவகாரத்தால் படத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்பது இனிமேல்தான் தெரியும்.