சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் புஷ்பா. செம்மர கடத்தல் பின்னணியில் உருவாகி வரும் இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிப்பதற்காக, முதலில் விஜய்சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்பிறகு, அவர் விலகிக்கொள்ள, பாபிசிம்ஹா அதில் நடிப்பதாக பேச்சு அடிபட்டது. இந்தநிலையில் அந்த கதாபாத்திரத்தின் பஹத் பாசில் நடிக்கிறார் என கடந்த மாதம் உறுதியானது.
சில வருடங்களுக்கு முன்பு. ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழர்கள் சிலர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருவதாக ஏற்கனவே சொல்லப்பட்டு வருகிறது. இதில் வில்லத்தனம் கொண்ட மோசமான காட்டிலாகா அதிகாரியாக தான் பஹத் பாசில் நடிக்கிறார் என்று ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழர்கள், செம்மரக்கடத்தல் என்கிற சர்ச்சை பின்புலத்தில், கதை நகர்வதால் தான், இதில் நடிக்க விரும்பாமல் விஜய்சேதுபதி விலகி கொண்டதாகவும், பஹத் பாசில் மலையாளி என்பதால், அவரை வைத்து, இந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து கொள்ளலாம் என்பதால் தான், அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.